பதிவு செய்த நாள்
01 ஏப்2018
05:06
புதுடில்லி: மத்திய அரசு, வேளாண் துறையில் இளம் தொழில் முனைவோரை ஈர்த்து, விளைபொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்த, ‘ஸ்டார்ட் அப்’ நிதியம் அமைக்க திட்டமிட்டுள்ளது.வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடுபவை, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் எனப்படுகின்றன. இதற்கு, ‘பிளிப்கார்ட், ஸ்விகி, ஓ.எல்.எக்ஸ்’ போன்ற நிறுவனங்களை உதாரணமாக கூறலாம்.
இது போன்று, புதிய சிந்தனை மற்றும் நவீன தொழில்நுட்ப பின்புலத்தில் துவக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க, மத்திய அரசு, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், வேளாண் துறை ஏற்றுமதியை மேம்படுத்த, மத்திய வர்த்தக அமைச்சகம், பிரத்யேகமாக, வரைவு கொள்கையை உருவாக்கியுள்ளது.இக்கொள்கையின்படி, வேளாண் துறையில் இளம் தொழில்முனைவோரை ஈர்த்து, விளைபொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்த, ஸ்டார்ட் அப் நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளது.ஒருவர், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்க விரும்பினால், அதற்கான நிதியுதவி, ஆலோசனை ஆகியவற்றை, அரசு அமைக்க திட்டமிட்டுள்ள, ஸ்டார்ட் அப் நிதியம் வழங்கும்.இதற்கு, தொழில் துவங்க விரும்புவோர், ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கொள்கை, வடிவமைப்பு மற்றும் திட்ட அறிக்கையை, நிதியத்திற்கு வழங்க வேண்டும்.வேளாண் ஏற்றுமதி சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவன திட்டங்கள் அனைத்தையும், நிதியம் பரிசீலிக்கும். அதில், தொழில்முனைவோர் அளித்த திட்டம் மூலம் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என தெரிந்தால், நிதியுதவி வழங்கப்படும்.இதுபோல, வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்தும் பல்வேறு அம்சங்கள், மத்திய அரசின், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டிற்கான வரைவு கொள்கையில் இடம் பெற்றுள்ளன.மத்திய வர்த்தக அமைச்சகம், மக்களின் கருத்துக் கேட்புக்காக, வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு வரைவு கொள்கையை வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு கொள்கை குறித்து, 5ம் தேதிக்குள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க, ஏராளமான தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளன. எனினும், இளம் தொழில்முனைவோரை அதிக அளவில் ஈர்க்கவும், வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்தவும், ஸ்டார்ட் அப் நிதியம் ஏற்படுத்த உள்ளது வரவேற்கத்தக்கது. இதனால், வேளாண் ஏற்றுமதி அதிகரிக்கும் என்பதுடன், விளைபொருட்களுக்கு உரிய விலையை விவசாயிகள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் நிறுவனம், தேநீர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்காக நாங்கள், தேயிலை, இஞ்சி, துளசி, ஏலக்காய் ஆகியவற்றை, நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறோம்
நிதின் சலுஜா, நிறுவனர், ‘சாயோஸ்’ – ஸ்டார்ட் அப் நிறுவனம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|