பதிவு செய்த நாள்
02 ஏப்2018
00:20
கடன் தகுதியை, தீர்மானிக்க உதவும் கிரெடிட் ஸ்கோரை, தினமும் அறிந்துக் கொள்ள உதவும் சந்தா வசதியை, டிரான்ஸ் யூனியன் சிபில் அறிமுகம் செய்துள்ளது.
வங்கிகள், கடன் வழங்க தீர்மானிக்கும் போது, கிரெடிட் ஸ்கோர் எனப்படும், கடன் தகுதி மதிப்பீட்டை, முக்கியமாக கருதுகின்றன. டிரான்ஸ் யூனியன் சிபில் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள், இத்தகைய கிரெடிட் ஸ்கோர் மதிப்பீட்டை, வழங்குகின்றன.
கடந்த, 2017 முதல், ஆண்டுக்கு
ஒருமுறை, வாடிக்கையாளர்களுக்கு, கிரெடிட் ஸ்கோர்
அறிக்கையை, இலவசமாக வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கான, புதிய சந்தா முறையை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, நான்கு விதமான
சந்தாவை பெறலாம். ஒரு மாதம்
முதல் ஓராண்டு வரையான, இந்த சந்தாவை செலுத்திய
பின், தினசரி கிரெடிட் ஸ்கோரை தெரிந்துக் கொள்ளும் வசதி அளிக்கப்படும்.
இதன் மூலம், கிரெடிட் ஸ்கோரில் ஏற்படும் மாற்றங்களை, தெரிந்துக் கொள்ளலாம். கிரெடிட் ஸ்கோர் போக்கைக் கண்காணிக்க, இந்த அம்சம் உதவியாக இருக்கும்.
கிரெடிட் ஸ்கோரில்,
தவறுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால், அவற்றைக் கண்டறிந்து, உடனடியாக திருத்திக்கொள்ளவும், இந்த வசதி உதவும். இதன் மூலம், கிரெடிட் ஸ்கோர் எதிர்மறையாக அமைவதை தவிர்க்கலாம்.
அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால், கடன் பெறும் வாய்ப்பு அதிகம் என்பதோடு, கடனுக்கான வட்டி விகிதமும், சாதகமாக அமையலாம் என கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|