பதிவு செய்த நாள்
03 ஏப்2018
03:02
புதுடில்லி:‘கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், வங்கி கடனை திரும்ப செலுத்த தவறும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ எச்சரித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், வங்கி கடனை திரும்ப செலுத்த தவறிய நிறுவனங்களின் பங்கு, 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2016 – 17ம் நிதியாண்டில், 2.6 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், 646 நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பீடு, உயர்த்தப்பட்டுள்ளது; 418 நிறுவனங்களின் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது. இதை முன்னேற்றமாக கருதக் கூடாது.
ஏனெனில், மதிப்பீடு குறைக்கப்பட்ட நிறுவனங்களின் கடன், 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயர்வாக உள்ளது. மதிப்பு உயர்த்தப்பட்ட நிறுவனங்களின் கடன், 1.70 லட்சம்கோடி ரூபாய் என்ற அளவிற்கே உள்ளது.நடப்பு நிதியாண்டில், வட்டி விகிதம் உயர்வு, தொழில் துறையை பாதிக்கும். பஞ்சாப் நேஷனல் வங்கியின், 200 கோடி டாலர் மோசடி போன்றவற்றால், கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு உள்ள ஆர்வம் குறையும்.இவற்றின் தாக்கம், தொழில் துறையில் எதிரொலிக்கும் என்பதால், நிறுவனங்கள், கடனை திரும்பச் செலுத்த திணறும் எனலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|