பதிவு செய்த நாள்
03 ஏப்2018
03:03
சென்னை:தொடர் போராட்டங்களால், காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறி விலை மெல்ல உயரத் துவங்கியுள்ளது. 70 ரூபாய்க்கு விற்று வந்த டபுள்பீன்ஸ், தற்போது, 1 கிலோ, 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பச்சை பட்டாணி, 70 ரூபாய்க்கும், இஞ்சி, 1 கிலோ, 30 ரூபாயிலிருந்து, 40 – 45 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளன. காலிபிளவர், 10 ரூபாயிலிருந்து, 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல் புடலங்காயும், 10 ரூபாயிலிருந்து, 15 – 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. முட்டைகோஸ் விலை, 6 – 8 ரூபாயாக சரிந்துள்ளது. வெங்காயம், 15 ரூபாய்க்கும்; சாம்பார் வெங்காயம், 25 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.அடுத்து வரும் நாட்களில், காவிரி பிரச்னைக்காக வேலைநிறுத்த போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் மற்றும் வணிகர்கள் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காய்கறி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை வெப்பமும் சுட்டெரிக்க துவங்கியுள்ளதால், ஒன்றிரண்டு வாரத்தில் காய்கறி விலை கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|