பதிவு செய்த நாள்
03 ஏப்2018
03:03
சென்னை:விலை குறைவான திராட்சைக்கு முந்த வேண்டியது அவசியமாகி உள்ளது.கோயம்பேடு சந்தையில், திராட்சை தற்போது ஒரு டிரே (10 கிலோ) 550 – 600 ரூபாய் வரை விற்பனையாகிறது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும், திராட்சை வகைகள் கோடை காலம் சூடுபிடிக்கும் நிலையில் சீசன் முடிவடையும்.
டிசம்பர் முதல் இம்மாத, 3வது வாரம் வரை திராட்சை சீசன் நீடிக்கும். இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளதால், விலை குறைந்த திராட்சையை ருசிக்க இதுவே தருணம்.மேலும், ஆரஞ்சு சீசன் இந்தாண்டு குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் ஆரஞ்சு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, சீதோஷ்ண மாறுபாட்டால் விளைச்சல் குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|