பதிவு செய்த நாள்
03 ஏப்2018
03:05
மும்பை:‘‘வங்கிகள், கடன் வழங்குவதற்காக பின்பற்றும் நடைமுறைகளை, மிக ஆழமாக சோதிக்க வேண்டும்,’’ என, உண்மை விளம்பி அரவிந்த் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய முதலீட்டாளர் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனரான இவர், வங்கிகளின் வாராக் கடன் பின்னணியில், வங்கி அதிகாரிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ரகசிய தொடர்பு உள்ளதை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக அம்பலப்படுத்தினார்.
தற்போது, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சாருக்கு தலைவலி ஏற்படுத்தியுள்ள, ‘வீடியோகான்’ நிறுவனத்தின், 3,250 கோடி ரூபாய் வாராக் கடன் விவகாரத்தை, அரவிந்த் குப்தா தான், 2016ல் முதன் முதலாக கிளறினார்.
இந்த வகையில், இவர், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான வாராக் கடன் கணக்குகளை, மத்திய நிதியமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.அத்துடன், ரிசர்வ் வங்கி, ‘செபி’, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ., தீவிர மோசடி புலனாய்வு பிரிவு, மத்திய நிதியமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட அமைப்புகளிடத்திலும் தெரிவித்தார்.‘‘ஆனால், யாரும் என் கேள்விகளுக்கு பதில் தரவில்லை,’’ என்கிறார்
அரவிந்த் குப்தா.அவர் மேலும் கூறியதாவது:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மட்டுமின்றி, இதர வங்கிகளும், கடன் வழங்கும் முறைகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை மறுசீரமைக்கவோ அல்லது கடன் வழங்கவோ பின்பற்றும் அளவுகோல்கள் குறித்து, தீர விசாரிக்க வேண்டும்.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியை போல, இதர வங்கிகளிலும், நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதன் பின்னணியில்,ஏதேனும் ஆதாயம் உள்ளதா என, ஆராய வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள், வாராக் கடன் மூலம், வங்கிகளை மூழ்கடிப்பதற்கு முன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|