திராட்சை  இனி இனிக்­காதுதிராட்சை இனி இனிக்­காது ... ‘இ – வே’ பில் இம்முறை வெற்றி ‘இ – வே’ பில் இம்முறை வெற்றி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘வங்கி கடன் நடைமுறைகளை சோதிக்க வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2018
03:05

மும்பை:‘‘வங்­கி­கள், கடன் வழங்­கு­வ­தற்­காக பின்­பற்­றும் நடை­மு­றை­களை, மிக ஆழ­மாக சோதிக்க வேண்­டும்,’’ என, உண்மை விளம்பி அர­விந்த் குப்தா வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.
இந்­திய முத­லீட்­டா­ளர் பாது­காப்பு கவுன்­சில் நிறு­வ­ன­ரான இவர், வங்­கி­க­ளின் வாராக் கடன் பின்­ன­ணி­யில், வங்கி அதி­கா­ரி­க­ளுக்­கும், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்­கும் ரக­சிய தொடர்பு உள்­ளதை, இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன், முதன் முத­லாக அம்­ப­லப்ப­டுத்­தி­னார்.
தற்­போது, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதி­காரி, சந்தா கோச்­சா­ருக்கு தலை­வலி ஏற்­ப­டுத்­தி­யுள்ள, ‘வீடி­யோ­கான்’ நிறு­வ­னத்­தின், 3,250 கோடி ரூபாய் வாராக் கடன் விவ­கா­ரத்தை, அர­விந்த் குப்தா தான், 2016ல் முதன் முத­லாக கிள­றி­னார்.
இந்த வகை­யில், இவர், ஒரு டஜ­னுக்­கும் மேற்­பட்ட சந்­தே­கத்­திற்­கி­ட­மான வாராக் கடன் கணக்­கு­களை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கத்­தின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றுள்­ளார்.அத்­து­டன், ரிசர்வ் வங்கி, ‘செபி’, மத்­திய ஊழல் கண்­கா­ணிப்பு ஆணை­யம், சி.பி.ஐ., தீவிர மோசடி புல­னாய்வு பிரிவு, மத்­திய நிதி­ய­மைச்­சர் அலு­வ­ல­கம் உள்­ளிட்ட அமைப்­பு­க­ளி­டத்­தி­லும் தெரி­வித்­தார்.‘‘ஆனால், யாரும் என் கேள்­வி­க­ளுக்கு பதில் தர­வில்லை,’’ என்­கி­றார்
அர­விந்த் குப்தா.அவர் மேலும் கூறி­ய­தா­வது:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மட்­டு­மின்றி, இதர வங்­கி­களும், கடன் வழங்­கும் முறை­களை தீவி­ர­மாக ஆய்வு செய்ய வேண்­டும். கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்க­ளின் வாராக் கடன்­களை மறு­சீ­ர­மைக்­கவோ அல்­லது கடன் வழங்­கவோ பின்­பற்­றும் அள­வு­கோல்­கள் குறித்து, தீர விசா­ரிக்க வேண்­டும்.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கியை போல, இதர வங்­கி­க­ளி­லும், நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்­கி­ய­தன் பின்­ன­ணி­யில்,ஏதே­னும் ஆதா­யம் உள்­ளதா என, ஆராய வேண்­டும். கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், வாராக் கடன் மூலம், வங்­கி­களை மூழ்­க­டிப்­ப­தற்கு முன், இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும்.இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)