பதிவு செய்த நாள்
03 ஏப்2018
03:06
புதுடில்லி:‘இ – வே’ பில் எனப்படும், பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதற்கான, மின்வழிச் சீட்டு நடைமுறை, இம்முறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.‘இ – வே’ பில் நடைமுறை, முதலில், பிப்., 1ல் அறிமுகமானது. இதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள சரக்கு போக்குவரத்திற்கு, ‘இ – வே’ பில் கட்டாயம் ஆகும்.ஆனால், தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, துவக்க நாளன்றே இத்திட்டமானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, மீண்டும், 1ம் தேதி முதல் அமல் செய்யப்பட்டது.அறிமுகம் ஆன முதல் நாளான, ஏப்., 1ம் தேதி, 2.59 ‘இ – வே’ பில்களும்; இரண்டாம் நாளன்று, மதியம், 3:00 மணி வரை, 2.89 பில்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, ஜி.எஸ்.டி., நெட்வொர்க் நிறுவன தலைமை செயல் அதிகாரி, அதியா, ‘‘இம்முறை, ‘இ – வே’ பில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படு விட்டது. இதுவரை எந்தவித தொழில்நுட்ப சிக்கல்களும் ஏற்படவில்லை,” என தெரிவித்தார்.முதற்கட்டமாக, 1ம் தேதி முதல், மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கான, ‘இ – வே’ பில் அமலுக்கு வந்துள்ளது.அடுத்த கட்டமாக, மாநிலத்திற்குள்ளான சரக்கு போக்குவரத்துக்கும் இத்திட்டம்விரிவுபடுத்தப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|