பதிவு செய்த நாள்
03 ஏப்2018
03:08
மும்பை:‘வங்கி துறையில், மூத்த அதிகாரிகளின் தேர்வு நடைமுறை தான், ஆக்சிஸ் வங்கி தலைமை செயல் அதிகாரி ஷிகா ஷர்மாவிற்கான பணி நீட்டிப்பிலும் பின்பற்றப்பட்டது’ என, அவ்வங்கி தெரிவித்துள்ளது.கடந்த, 2009ல், ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஷிகா ஷர்மா நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நான்காவது முறையாக, ஜூன் 1 முதல், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க, ஆக்சிஸ் வங்கி இயக்குனர் குழு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், ஷிகா ஷர்மாவின் பதவி நீட்டிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு, ஆக்சிஸ் வங்கி தலைவர், சஞ்சய் மிஸ்ராவுக்கு, ரிசர்வ் வங்கி கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, ஆக்சிஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மூத்த அதிகாரிகளின் பணி நியமன விதிமுறைகளை பின்பற்றியே, ஷிகா ஷர்மாவின் பதவி நீட்டிப்பிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைமறைவாக உள்ள, வைர வியாபாரி, நிரவ் மோடியின் மோசடியில் பாதிக்கப்பட்ட வங்கிகளில், ஆக்சிஸ் வங்கியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|