பதிவு செய்த நாள்
03 ஏப்2018
03:09
புதுடில்லி;கடந்த நிதியாண்டில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 2,155 கோடி ரூபாய் திரட்டி சாதனை படைத்து உள்ளன. இது, முந்தைய நிதியாண்டில் திரட்டியதை விட, இரண்டரை மடங்கு அதிகம்.மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு என, தனி பிரிவு, 2012, மார்ச்சில் துவக்கப்பட்டது.இப்பிரிவில், 2017 – 18ம் நிதியாண்டில், 148 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு, 2,155 கோடி ரூபாய் திரட்டியுள்ளன.
இது, முந்தைய, 2016 – 17 மற்றும், 2015 – 16ம் நிதியாண்டுகளில், முறையே, 810 கோடி ரூபாய் மற்றும், 303 கோடி ரூபாயாக இருந்தன.கடந்த நிதியாண்டில், 60க்கும் அதிகமான நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள், பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன.
அவை, தயாரிப்பு, ஜவுளி, பொறியியல், விவசாயம், ரசாயனம், உணவு பதப்படுத்துதல், ஊடகம்– பொழுதுபோக்கு, கட்டுமானம், நிதி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவை ஆகும்.மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவில், புதிய பங்கு வெளியீட்டிற்கான விதிமுறைகள் மிக எளிமையானவை.குறைந்தது, மூன்று ஆண்டுகள் செயல்பட்டு, 125 கோடி ரூபாய் வரை, பங்கு மூலதனம் கொண்டுள்ள நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள்
பிரிவில், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம், இந்நிறுவனங்கள், அவற்றின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு தேவையான நிதியை திரட்டலாம்.வளர்ச்சியின் துவக்கத்தில் உள்ள, இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதலீடுகள் மீதான வருவாய் அதிகம் உள்ளதே, இதற்கு காரணம்.சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், கடந்த நிதியாண்டு வரை, 370 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 4,100 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இந்நிறுவன பங்குகளின் சந்தை மூலதனம், 33 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.முதலீட்டாளர்களின் வரவேற்பை பெற்ற சில நிறுவனங்கள், இப்பிரிவின் பட்டியலில் இருந்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு மாறியுள்ளன.
முதல் நாளன்றே...
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், 2017 – 18ம் நிதியாண்டில், 148 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டன. முதல் நாளன்றே, 64 நிறுவனங்களின் பங்குகள், 20 சதவீத விலை உயர்வை கண்டு, அதிகபட்ச வரம்பை எட்டின.
100 மடங்குகடந்த நிதியாண்டில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், ஒன்பது நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளுக்கு, முதலீட்டாளர்களிடம் அமோக வரவேற்பு காணப்பட்டது. இந்நிறுவனங்கள் வெளியிட்ட பங்குகளை விட, 100 மடங்கிற்கும் அதிகமான பங்கு ஒதுக்கீடு கோரி விண்ணப்பங்கள் குவிந்தன. இது, இப்பிரிவின் மீது, முதலீட்டாளர்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுவதாக பங்குத் தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|