ஷிகா ஷர்மா பணி நீட்டிப்புக்கு ஆக்சிஸ் வங்கி விளக்கம்ஷிகா ஷர்மா பணி நீட்டிப்புக்கு ஆக்சிஸ் வங்கி விளக்கம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2018
03:09

புதுடில்லி;கடந்த நிதி­யாண்­டில், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 2,155 கோடி ரூபாய் திரட்டி சாதனை படைத்­து உள்­ளன. இது, முந்­தைய நிதி­யாண்­டில் திரட்­டி­யதை விட, இரண்­டரை மடங்கு அதி­கம்.மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு என, தனி பிரிவு, 2012, மார்ச்­சில் துவக்­கப்­பட்­டது.இப்­பி­ரி­வில், 2017 – 18ம் நிதி­யாண்­டில், 148 நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு, 2,155 கோடி ரூபாய் திரட்­டி­யுள்­ளன.
இது, முந்­தைய, 2016 – 17 மற்­றும், 2015 – 16ம் நிதி­யாண்­டு­களில், முறையே, 810 கோடி ரூபாய் மற்­றும், 303 கோடி ரூபா­யாக இருந்­தன.கடந்த நிதி­யாண்­டில், 60க்கும் அதி­க­மான நக­ரங்­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்­டன.
அவை, தயா­ரிப்பு, ஜவுளி, பொறி­யி­யல், விவ­சா­யம், ரசா­ய­னம், உணவு பதப்­ப­டுத்­து­தல், ஊட­கம்– பொழு­து­போக்கு, கட்­டு­மா­னம், நிதி உள்­ளிட்ட துறை­க­ளைச் சேர்ந்­தவை ஆகும்.மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­க­ளின், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரி­வில், புதிய பங்கு வெளி­யீட்­டிற்­கான விதி­மு­றை­கள் மிக எளி­மை­யா­னவை.குறைந்­தது, மூன்று ஆண்­டு­கள் செயல்­பட்டு, 125 கோடி ரூபாய் வரை, பங்கு மூல­த­னம் கொண்­டுள்ள நிறு­வ­னங்­கள், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள்
பிரி­வில், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொள்­ள­லாம். இதன் மூலம், இந்­நி­று­வ­னங்­கள், அவற்­றின் வளர்ச்சி மற்­றும் விரி­வாக்­கத்­திற்கு தேவை­யான நிதியை திரட்­ட­லாம்.வளர்ச்­சி­யின் துவக்­கத்­தில் உள்ள, இத்­த­கைய நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்ய, முத­லீட்­டா­ளர்­கள் அதிக ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர். முத­லீ­டு­கள் மீதான வரு­வாய் அதி­கம் உள்­ளதே, இதற்கு கார­ணம்.சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்கள் பிரி­வில், கடந்த நிதி­யாண்டு வரை, 370 நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 4,100 கோடி ரூபாய் திரட்­டி­யுள்­ளன. இந்­நி­று­வன பங்­கு­க­ளின் சந்தை மூல­த­னம், 33 ஆயி­ரம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.முத­லீட்­டா­ளர்­க­ளின் வர­வேற்பை பெற்ற சில நிறு­வ­னங்­கள், இப்­பி­ரி­வின் பட்­டி­ய­லில் இருந்து, மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­க­ளுக்கு மாறி­யுள்­ளன.
முதல் நாளன்றே...
மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­க­ளின், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பிரி­வில், 2017 – 18ம் நிதி­யாண்­டில், 148 நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டன. முதல் நாளன்றே, 64 நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள், 20 சத­வீத விலை உயர்வை கண்டு, அதி­க­பட்ச வரம்பை எட்­டின.
100 மடங்குகடந்த நிதி­யாண்­டில், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பிரி­வில், ஒன்­பது நிறு­வ­னங்­க­ளின் புதிய பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் அமோக வர­வேற்பு காணப்­பட்­டது. இந்­நி­று­வ­னங்­கள் வெளி­யிட்ட பங்­கு­களை விட, 100 மடங்­கிற்­கும் அதி­க­மான பங்கு ஒதுக்­கீடு கோரி விண்­ணப்­பங்­கள் குவிந்­தன. இது, இப்­பி­ரி­வின் மீது, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு உள்ள நம்­பிக்­கையை காட்­டு­வ­தாக பங்­குத் தர­கர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)