பதிவு செய்த நாள்
06 ஏப்2018
02:38
புதுடில்லி:டிஜிட்டல் கரன்சி எனும், மெய்நிகர் நாணய பயன்பாட்டுக்கு, ரிசர்வ் வங்கி நேற்று கிடுக்கிப்பிடி போட்ட கையோடு, சொந்தமாக புதிய டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.
‘வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன்’ உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களை கையாளும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சேவைகளை, வங்கிகள் மூன்று மாதங்களுக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என, நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.அத்துடன் ‘பியட் டிஜிட்டல் கரன்சி’ எனும் மெய்நிகர் கரன்சியை வெளியிடுவது குறித்த ஆராய்ச்சியில் இறங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பியட் டிஜிட்டல் கரன்சி என்பது, அங்கீகாரமற்ற மெய்நிகர் நாணயங்களை போல அல்லாமல், ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்துடன் வெளியிடுவதாகும்.
வட்டி விகித அறிவிப்புக்கு பின், இது குறித்து பத்திரிகையாளர்களிடம் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், பி.பி.கனுன்கோ கூறியதாவது:பல நாடுகளின் மத்திய வங்கிகள், பியட் டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது குறித்து விவாதங்கள் நடத்தி வருகின்றன. கரன்சி நோட்டுகளுடன் இத்தகைய பியட் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிடும். இதற்கு ரிசர்வ் வங்கியே பொறுப்பேற்கும்.மேலும், ‘பிளாக்செயின்’ தொழில்நுட்ப பயன்பாடு குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இது குறித்த எங்கள் அறிக்கையை, ஜூன் மாதத்தில் அரசுக்கு சமர்ப்பிப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|