பதிவு செய்த நாள்
06 ஏப்2018
02:41
மும்பை:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம், மாற்றமின்றி, 6 சதவீதமாகவே தொடருவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையிலான, நிதிக் கொள்கை குழுவின் முதல் கூட்டம், மும்பையில் நேற்று நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை:நடுத்தர கால அளவில், சில்லரை பணவீக்க இலக்கு, 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை எட்டும் நோக்கில், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்வதில்லை என, நிதிக்குழு முடிவு செய்துஉள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த, 2017 ஆகஸ்டில், ரெப்போ வட்டி விகிதம், 6.25 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, நான்கு முறை நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்ற போதிலும், ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் சில்லரை பணவீக்கம், பிப்ரவரியில், 4.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஜனவரியில், 5.07 சதவீதமாக இருந்தது.நிதிக் கொள்கை குழுவின் அடுத்த கூட்டம், ஜூன், 6ல் நடைபெறுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|