பதிவு செய்த நாள்
06 ஏப்2018
02:46
சென்னை:தேங்காய் விலை உயர்வால், இளநீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.சென்னையில் கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளதை தொடர்ந்து, இளநீர் வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.பொள்ளாச்சி, புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் இளநீர், 25 – 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இவ்விலை, வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்கிறார், மொத்த விலை வியாபாரி திருவேங்கடம்.
இது குறித்து அவர் கூறியதாவது:சென்னையில் பெரம்பூர், மணலி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இளநீரை மொத்தமாக சப்ளை செய்கிறோம். பொள்ளாச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள இளநீரை, 26 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, சென்னையில் சில்லரை விற்பனை கடைகளுக்கு விற்கிறோம்.தற்போது தேங்காய் விலை அதிகரித்து இருப்பதால், இளநீர் கிடைப்பது அரிதாக உள்ளது.
சில்லரை விலையில் ஒரு இளநீர், 30 ரூபாயாக உள்ளது.சிலர் அதிக லாபத்திற்காக விலையை அதிகப்படுத்தி விற்கின்றனர். இதனால் இளநீர் வியாபாரம் பாதிக்கிறது. அதற்காகவே சில்லரை விற்பனை கடைகளில் அறிவிப்பு பலகையை எழுதி வைத்துள்ளோம்.
அடுத்த சில வாரங்களில், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது போக்குவரத்து செலவும் அதிகரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையும் இருப்பதால், இளநீர் வியாபாரம் பெரிய அளவில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|