பதிவு செய்த நாள்
10 ஏப்2018
05:07
சென்னை:சென்னை துறைமுகம், 2017- – 18ம் நிதியாண்டில், மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை விட, 6 சதவீதம் அதிகம் கையாண்டுள்ளது.சென்னை துறைமுகத்தில், 2017 – 18ம் நிதியாண்டில், 51.88 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில், 50.21 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது.
இதன் மூலம், 32 கோடி ரூபாய் நிகர உபரி வருமானம் வரும் என, துறைமுக நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த, 48.88 மில்லியன் டன்னை விட, 3 மில்லியன் டன் அதிகமாக கையாண்டு, 6 சதவீத சரக்குகளை அதிகம் பெற்றுள்ளது. கையாளப்பட்ட சரக்குகளின் மொத்த அளவில், 30 மில்லியன் டன் கன்டெய்னர் சரக்குகளும், 13.5 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களும் அடங்கும்.
மேலும், 15 லட்சத்து, 49 ஆயிரத்து, 457 கன்டெய்னர்களை கையாண்டுள்ள சென்னை துறைமுகம், 2016 – 17ம் நிதியாண்டை காட்டிலும், 3.65 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.ஜிப்ஸம், கச்சா சீனி, பெட்ரோலியப் பொருட்கள், பேரைட்ஸ் போன்ற சரக்குகளை கையாண்டது, சென்னை துறைமுகத்தின் சாதனையாக உள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|