பதிவு செய்த நாள்
10 ஏப்2018
05:10
மும்பை:‘கடந்த ஆண்டு, இறுதி நிலவரப்படி இருசக்கர வாகன கடன், 39,100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது’ என, ‘ஹை மார்க் கிரெடிட் இன்பர்மேஷன் சர்வீசஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த ஆண்டு, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு அளித்த கடன், 32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருசக்கர வாகன கடன் சந்தையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்களிப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 60 சதவீதமாக இருந்தது.
இது தற்போது, 67 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டில், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், இருசக்கர வாகனங்களுக்கு அதிக கடன் வழங்கியதில், மஹாராஷ்டிரா, 0.55 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது. அதே சமயம், 90 – 180 நாட்களை கடந்து, கடனை திரும்பச் செலுத்தாதோர் அதிகம் உள்ள மாநிலங்களில், குஜராத் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்து, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகியவை உள்ளன.
கடந்த நிதியாண்டில், 2 கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அதில், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 50 லட்சம் வாகனங்களுக்கு, கடன் வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|