பதிவு செய்த நாள்
10 ஏப்2018
05:11
சென்னை:கோடை வெயில் அதிகரிப்பு மற்றும் வரத்து குறைவால், காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்ந்து உள்ளது.கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து, சவுந்தரராசன் மற்றும் எஸ்.எஸ்.குமார் கூறியதாவது:வெயில் அதிகரிப்பால் காய்கறி வரத்து குறைந்து விட்டது. 25 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ், 30 – 40 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. 10 – 18 ரூபாய்க்கு விற்ற வெண்டைக்காய், பாகற்காய், உருளை, காலிபிளவர், சின்ன வெங்காயம், நுால்கோல், பீட்ருட் உள்ளிட்டவை, 20 – 25 ரூபாயாக விலை உயர்ந்துள்ளன.இஞ்சி, 45 -– 50 ரூபாயாகி உள்ளது. பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. முருங்கைகாய், 25 ரூபாயாகி உள்ளது.
திராட்சை, 10 கிலோ, 600 – 700 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம், 10 கிலோ திராட்சை, 550 ---– - 600 ரூபாய்க்கு விற்றது. சாத்துக்குடி கடந்த வார விலையை ஒப்பிடுகையில், கிலோவுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 48 ரூபாயாகவும், கமலா மூன்று ரூபாய் உயர்ந்து, 75 ரூபாயாகவும் விற்பனைஆகின்றன.மாம்பழம் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. கல் வைத்து பழுக்கப்படும் மாம்பழத்தால், பாதிப்பு என்பதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாம்பழம் விற்பனையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
வாடிக்கையாளர்கள் வாங்கி செல்லும் மாம்பழத்தை வாங்கி கூட, அதிகாரிகள் சோதனை செய்வதால், மாம்பழத்தை வாங்கி வைப்பதில் வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|