பதிவு செய்த நாள்
10 ஏப்2018
05:13
புதுடில்லி:கூடங்குளம் அணு மின் நிலையத்தில், புதிய, இரு பிரிவுகளை வடிவமைத்து, கட்டமைக்கும், 1,081 கோடி ரூபாய் பணிக்கான ஒப்பந்தத்தை, ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் பெற்றுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின், பொறியியல் பிரிவு தலைமை செயல் அதிகாரி, அருண் குப்தா கூறியதாவது:கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 3 மற்றும் 4ம் பிரிவுகளை வடிவமைத்து, கட்டி, மின் திட்டங்களின் மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை நிறுவனம் பெற்றுள்ளது.இது, இத்துறையில், நிறுவனத்திற்கு உள்ள திறனை, வெளிப்படுத்த கிடைத்துள்ள, பெருமைக்குரிய வாய்ப்பு.இப்பணியை, 56 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். பொருட்கள் இறக்குமதிக்கு, 2.32 கோடி டாலர் செலவிடப்படும்.
நடப்பு நிதியாண்டில், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.லார்சன் அண்டு டூப்ரோ, பெல், டாடா புராஜக்ட்ஸ், பி.ஜி.ஆர்., ஆகிய நிறுவனங்களின் போட்டியை சமாளித்து, இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|