‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம்:அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம்:அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் ... தமிழகத்தில் ராணுவ தளவாட நிறுவனம்:சென்னை, திருச்சி, கோவையில் ஆய்வு மையங்கள் தமிழகத்தில் ராணுவ தளவாட நிறுவனம்:சென்னை, திருச்சி, கோவையில் ஆய்வு ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சந்தா கோச்சார்: ஆர்.பி.ஐ.,க்கு தலைவலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
00:50

புதுடில்லி:'வீடியோகான்' விவகாரம் காரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, சந்தா கோச்சார், பதவி விலக உள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வீடியோகான் நிறுவனத்திற்கு அளித்த, 3,250 கோடி கடனுக்கு, சந்தா கோச்சார் குடும்பத்தினர், கைமாறு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து, சந்தா கோச்சார் கணவர், தீபக் கோச்சார், மைத்துனர் ராஜீவ் கோச்சார் ஆகியோரிடம், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சந்தா கோச்சார் பதவி விலக கோரும் தீர்மானத்தை நிறைவேற்றவும், புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யவும், வங்கி இயக்குனர் குழு, ஓரிரு நாட்களில் கூட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, சந்தா கோச்சார் பதவி விலகி, தற்காலிக தலைமை செயல் அதிகாரிக்கு வழி விடுவார் என, தெரிகிறது.எனினும், சந்தா கோச்சார் பதவியில் தொடர்வதும் விலகுவதும், ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவில் தான் உள்ளது. இதில், நிதியமைச்சகம் தலையிட முடியாது என, வங்கி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


விலை உயர்ந்த, 'ஆக்சிஸ்' வங்கி பங்குகள்

ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ஷிகா ஷர்மாவின் பதவிக் காலம் குறைக்கப்பட்டுள்ளதாக, வங்கியின் இயக்குனர் குழு, ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளது.இக்குழு, 2017ல், ஷிகா ஷர்மாவுக்கு நான்காவது முறையாக, பதவி நீட்டிப்பு அளித்தது. அதன்படி, ஜூன் முதல், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, அவர் பதவி வகிப்பார் என, தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஆக்சிஸ் வங்கி, 2015 - 16 மற்றும் 2016 - 17ம் நிதியாண்டுகளில், முறையே, 9,480 கோடி ரூபாய் மற்றும் 5,633 கோடி ரூபாய் கடனை, வாராக் கடனில் சேர்க்காமல் விட்டதை, ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது.இதையடுத்து, ஆக்சிஸ் வங்கிக்கு, 3 கோடி ரூபாய் அபராதம் விதித்ததுடன், நான்காவது முறையாக, ஷிகா ஷர்மாவுக்கு பணி நீட்டிப்பு ஏன் எனவும், ரிசர்வ் வங்கி கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில், 'ஷிகா ஷர்மா, இந்தாண்டு டிசம்பர் இறுதி வரையே பதவி வகிப்பார்' என, இயக்குனர் குழு, ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளது. பதவிக் காலத்தை குறைக்குமாறு, ஷிகா ஷர்மா தாமாகவே கேட்டுக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிகா ஷர்மா பதவி விலகும் செய்தியை தொடர்ந்து, நேற்று பங்குச் சந்தையில், ஆக்சிஸ் வங்கி பங்குகள் விலை, 5 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டது. இதன் பயனாக, வங்கியின் சந்தை மதிப்பில், 7,212 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)