பதிவு செய்த நாள்
12 ஏப்2018
00:44
புதுடில்லி:அடுத்த நான்கு ஆண்டுகளில், பல்வேறு துறைகள், மின்னணு தொழில்நுட்பத்திற்கு மாறுவதன் மூலம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 15 ஆயிரத்து, 400 கோடி டாலர் அதிகரிக்கும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இது, இந்திய ரூபாயில், 10 லட்சத்து, 1,000 கோடி ரூபாய் ஆகும்.
மைக்ரோசாப்ட் மற்றும்ஐ.டி.சி., நிறுவனங்கள் இணைந்து, இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதாரத்தில், டிஜிட்டல் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டன.இதன்படி, 15 நாடுகளைச் சேர்ந்த, 1,560 நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தி, வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 2017ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், டிஜிட்டல் எனப்படும் மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்கள் மற்றும் சேவைகளின் பங்கு, 4 சதவீதமாக இருந்தது.இது, ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ சாதனங்கள் இடையிலான இணைய பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் போன்ற மின்னணு தொழில்நுட்பங்களில் இயங்கும் சாதனங்கள் மூலம், சாத்தியமானது.
இந்தியாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மிக வேகமாக, மின்னணு தொழில்நுட்பத்திற்கு மாறி வருகின்றன.இதன் மூலம், பொருட்கள் உற்பத்தி, வாடிக்கையாளருக்கு ஆலோசனை வழங்கும் சேவை உள்ளிட்ட பிரிவுகளில், குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகின்றன. அத்துடன், நிறுவனங்களின் லாப வரம்பும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.
வரும், 2020ல், குறிப்பிட்ட துறைகளில், மின்னணு தொழில்நுட்ப பயன்பாடு, 40 சதவீதத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த, நான்கு ஆண்டுகளில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 60 சதவீதம் அளவிற்கு, மின்னணு தொழில்நுட்பத்தின் பங்களிப்பு இருக்கும்.இதன் மூலம், 2021ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 15 ஆயிரத்து, 400 கோடி டாலர் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|