தொடர்ந்து மூன்றாவது மாதமாக சில்லரை பணவீக்கம் குறைந்தது தொடர்ந்து மூன்றாவது மாதமாக சில்லரை பணவீக்கம் குறைந்தது ... பாசிப்பருப்பு, பட்டாணிக்கு கிராக்கி பாசிப்பருப்பு, பட்டாணிக்கு கிராக்கி ...
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு வரி சலுகை சுலபமாக முதலீடுகளை திரட்ட வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2018
01:22

புதுடில்லி:இளம் தொழில்­மு­னை­வோரை ஊக்­கு­விக்­கும் நோக்­கில், 10 கோடி ரூபாய்க்கு மேற்­ப­டாத முத­லீட்­டில் துவக்­கும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு, வரு­மான வரி விலக்கு சலு­கையை மத்­திய அரசு அறி­வித்­து உள்­ளது.
வலை­த­ளம் மூலம் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும் நிறு­வ­னங்­கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள் என, அழைக்­கப்­ப­டு­கின்றன. இதற்கு, ‘பிளிப்­கார்ட், அமே­சான், ஓலா, ஸ்நாப்­டீல்’ போன்ற எண்­ணற்ற நிறு­வ­னங்­களை எடுத்­துக்­காட்­டாக கூற­லாம்.
ஏரா­ள­மான இளை­ஞர்­கள், மொபைல் போன், ‘ஆப்’களை உரு­வாக்கி, பல­வி­த­மான ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை துவக்­கு­கின்­ற­னர்.இந்த நிறு­வ­னங்­க­ளுக்கு உதவ, மத்­திய அரசு, தனி நிதி­யம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­து­டன், மூன்று ஆண்­டு­க­ளுக்கு வரு­மான வரி மற்­றும் மூல­தன ஆதாய வரி­களில் விலக்கு உட்­பட பல சலு­கை­கள் வழங்­கப்­ப­டு­கின்றன.
எனி­னும், வரு­மான வரி சட்­டம், பிரிவு, 56ன் கீழ், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் திரட்­டும் முத­லீ­டு­கள் மீதான வரு­வாய்க்கு வரி விதிக்­கப்­ப­டு­கிறது.இத­னால், முத­லீ­டு­களை திரட்­டு­வது கடி­ன­மாக உள்­ள­தால், வரி விலக்கு அளிக்க வேண்­டும் என, ஏரா­ள­மான ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­தன.இதை ஏற்று, வரி விதிப்பு விதி­மு­றை­களை மத்­திய அரசு தளர்த்­தி­உள்­ளது.
இது குறித்து, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:‘ஏஞ்­சல் பண்டு’களின் முத­லீடு உட்­பட, ஒரு ஸ்டார்ட் அப் நிறு­வ­னத்­தின் மொத்த முத­லீடு, 10 கோடி ரூபாய்க்கு மிகா­மல் இருந்­தால், வரு­மான வரி விலக்கு பெற­லாம்.அத்­த­கைய முத­லீடு மேற்­கொள்­ளும் ஏஞ்­சல் பண்­டு­கள், குறைந்­த­பட்­சம், 2 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பை கொண்­டி­ருக்க வேண்­டும் அல்­லது முந்­தைய மூன்று நிதி­யாண்­டு­களில், சரா­ச­ரி­யாக, 25 லட்­சம் ரூபாய்க்கு மேல் வரு­வாய் ஈட்­டி­யி­ருக்க வேண்­டும்.
தளர்த்­தப்­பட்ட இந்த விதி­மு­றை­கள், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், சுல­ப­மாக முத­லீ­டு­களை திரட்ட துணை புரி­யும். அத்­து­டன் எளி­தாக, புதிய தொழில்­கள் துவங்­க­வும், வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரிக்­க­வும் உத­வும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

யார் பயன் பெறலாம்?
கடந்த, 2016, ஏப்., 1 முதல் பதிவு செய்­யப்­பட்ட ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், வரி சலு­கை­கள் பெற தகு­தி­யு­டை­யவை என, அறி­விக்­கப்­பட்­டுள்ளன. இந்த சலு­கை­கள் அனைத்­தும், தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு துறை­யின் விதி­மு­றை­களை பூர்த்தி செய்­யும் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு மட்­டுமே பொருந்­தும். இது­வரை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட, 8,765 நிறு­வ­னங்­களில், 88 நிறு­வ­னங்­க­ளுக்கு வரி சலுகை அளிக்­கப்­பட்டு உள்­ளது.
‘ஏஞ்சல் பண்டு’
ஒரு­வ­ரின் சிந்­த­னை­யில் உரு­வா­கும் ஸ்டார்ட் அப் தொழில், நிறு­வ­ன­மாக உருப்­பெற, துவக்­கத்­தில் நிதி­யு­தவி செய்­வோர், ‘ஏஞ்­சல்’ முத­லீட்­டா­ளர்­கள் ஆவர். ஓராண்­டில், 300 – -400 ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில், ‘ஏஞ்­சல் பண்டு’ எனப்­படும் நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)