பதிவு செய்த நாள்
14 ஏப்2018
00:21
சென்னை:மீன்பிடி தடையை தொடர்ந்து வஞ்சிரம் மீன், 1 கிலோ ஆயிரம் ரூபாயை தொட உள்ளது.தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இன்று நள்ளிரவு முதல், 61 நாள் மீன்பிடி தடை அமலாகிறது.
இதனால் மீன்களின் விலை கணிசமாக உயரும். சில வாரங்களாகவே மீன்களின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்தே வருகிறது. சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைகளில், வஞ்சிரம் மீன், 1 கிலோ 700 ரூபாயாக உள்ளது.சீலா ஒரு கிலோ, 200 – 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சங்கரா ஒரு கிலோ, 200 – 250 ரூபாயாகவும், வவ்வால் 500 ரூபாயாகவும், இறால் பெரியது, 180 – 200 வரையிலும், மத்தி, கிளிச்ச, கவளை மீன் வகைகள், 70 ரூபாயாகவும் உள்ளன.
அயிலை மீன், 150 ரூபாயாகவும், நண்டு, 150 – 200 ரூபாயாகவும் உள்ளது. பாம்பே சுறா, 150 – 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாம்பே கடமா, 150 ரூபாயாக உள்ளது.மீன்பிடி தடை அமல் ஆன பின், ஆந்திரா, கேரளா மற்றும் வடமாநில மீன் வகைகள் சென்னையில் விற்கப்படும்.அப்போது வஞ்சிரம் மீன் ஒரு கிலோ அதிகபட்சம் 1,000 ரூபாய் வரை இருக்கும் என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல், வலை மீன்களுக்கும், அதிக கிராக்கி இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|