உங்கள் விடு­முறை பய­ணத்­திற்­காக திறம்­பட சேமிப்­ப­தற்­கான வழிகள்! உங்கள் விடு­முறை பய­ணத்­திற்­காக திறம்­பட சேமிப்­ப­தற்­கான வழிகள்! ... இல்லத்திற்கே அழைக்கிறார் அனிருத் இல்லத்திற்கே அழைக்கிறார் அனிருத் ...
ஏர் இந்தியா: கருகத் திருவுளமோ?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
00:31

‘ஏர் இந்­தியா’ நிறு­வ­ன பங்­கு­களில் பெரும்­ப­கு­தியை விற்­பனை செய்­ய, மத்­திய அரசு முடிவெடுத்து, விளம்­ப­ரம் கொடுத்­துள்­ளது. ஆனால், இந்­தி­யா­வின் பிர­தான விமா­ன சேவை நிறு­வ­னத்தை வாங்­கு­வ­தற்கு ஆர்­வம் காட்­டு­வ­தில், பெரும் தயக்­கம் நில­வு­கிறது.
என்ன பிரச்னை?
ஏர் இந்தியா நிறுவனம், 54 ஆயி­ரத்து, 400 கோடி ரூபாய் கட­னில் இயங்­கு­கிறது. இதை தொடர்ந்து நடத்­து­வ­தில் எந்­த­வித பல­னும் இல்லை என்ற முடி­வுக்கு வந்த அர­சாங்­கம், பங்­கு­களை விற்­பனை செய்­யத் திட்­ட­மிட்­டது.அதன்­படி, ஏர் இந்­தி­யா­வின், 76 சத­வீத பங்­கு­க­ளை­யும், ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் நிறு­வ­னத்­தின், 100 சத­வீத பங்­கு­க­ளை­யும், ஏர் இந்­தியா சாட்ஸ் நிறு­வ­னத்­தின், 50 சத­வீத பங்­கு­க­ளை­யும், மொத்­த­மாக விற்­பனை செய்­வ­தற்கு விளம்­ப­ரம் கொடுத்­துள்­ளது.
இதை வாங்க விரும்­பு­ப­வர்­கள் முத­லில் பதிவு செய்து, மே, 14க்குள் தங்­கள் விருப்­பத்தை தெரி­விக்க வேண்­டும். அதி­லி­ருந்து சிறப்­பான ஒரு நிறு­வ­னத்தை தேர்வு செய்து, அத­னி­டம், ஏர் இந்­தியா பங்­கு­கள், செப்­டம்­ப­ருக்­குள் விற்­பனை செய்­யப்­படும்.
ஏர் இந்­தியா என்­ற­வு­ட­னேயே, எல்­லா­ரும் வியப்­பது உறுதி. ஆனால், தொழில் என்று வந்­து­விட்­டால், தற்­போ­தைய அதன் லாப, நஷ்­டம் என்ன? வாங்­கி­னால் தொடர்ந்து நடத்த முடி­யுமா? எவ்­வ­ளவு கடன்­க­ளைச் சுமக்க வேண்­டும்? கண்­ணுக்­கெட்­டிய துாரத்­தில் லாபம் தென்­ப­டு­கி­றதா என, யோசிப்­ப­தும் உறுதி. அது­தான், இப்­போது நடந்­துள்­ளது.
யார் வில்­லன்?
யாரெல்­லாம், ஏர் இந்­தியா நிறு­வ­னத்தை வாங்­கு­வ­தற்கு ஆர்­வம் காட்­டு­வர் என்று நினைத்­த­னரோ, அவர்­கள் அனை­வ­ரும், ‘ஜகா’ வாங்­கு­கின்­ற­னர். மிக முக்­கி­ய­மாக, ‘இண்­டிகோ, ஜெட் ஏர்­வேஸ், டாடா குழு­மம், எமி­ரெட்ஸ்’ ஆகி­யவை பின்­வாங்­கி­ விட்­டன. ‘ஸ்பைஸ்­ஜெட்’டைக் கேட்­டால், ‘எங்­க­ளைப் பொறுத்­த­வரை, ஏர் இந்­தியா மிகச் சிறிய நிறு­வ­னம், அத­னால், வேண்­டாம்’ என்று சொல்­லி­விட்­டது.
பகி­ரங்­க­மாக இந்த நிறு­வ­னங்­கள், ஏர் இந்­தி­யாவை வாங்­கு­வ­தற்கு தயங்க கார­ணம் என்ன? அர­சாங்­கம் முன்­வைத்­துள்ள பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் தான் இங்கே வில்­லன்.ஏர் இந்­தி­யாவை வாங்­கும் நிறு­வ­னம், அதை அப்­ப­டியே அடுத்த மூன்­றாண்­டு­க­ளுக்கு பெயரை மாற்­றா­மல் வைத்­துக்­கொள்ள வேண்­டும். அதா­வது வாங்­கக்­கூ­டிய விமான நிறு­வ­னம், அதை தன்­னோடுமுழு­மை­யாக உட­ன­டி­யாகஇணைத்­துக்­கொள்ள முடி­யாது.
அதன் அத்­தனை பணி­யா­ளர்­க­ளை­யும், அதா­வது, 11 ஆயி­ரத்து, 214 பணி­யா­ளர்­க­ளை­யும் வேலைக்கு எடுத்­துக்­கொள்ள வேண்­டும். இதற்­கும் மேல், 33 ஆயி­ரத்து, 392 கோடி ரூபாய் கட­னுக்­கும் பொறுப்­பேற்க வேண்­டும்.
சிக்­கல்
இங்கே தான் ஒவ்­வொரு பிரச்­னை­யாக வெளியே வரு­கிறது.‘இண்­டிகோ’ நிறு­வ­னதலை­வ­ ரான, ஆதித்யா கோஷ், ‘ஏர் இந்­தி­யா­வின் அனைத்து விமா­ன சேவை­க­ளை­யும் வாங்கி நிர்­வ­கிக்­கும் அள­வுக்கு எங்­க­ளுக்­குத் தகுதி இல்லை!’ என, கூறியது கவனத்திற்குரியது.அதா­வது, மொத்த நிறு­வ­னத்­தி­லும் எங்­க­ளுக்கு விருப்­ப­மில்லை என்­பது இதற்கு அர்த்­தம். இண்­டிகோ, வெளி­நா­டு­க­ளுக்­குப் பறப்­ப­தற்­கான உரி­மத்தை தான் விரும்­பு­கி­றதே தவிர, உள்­நாட்டு விமா­ன சேவை­களை அல்ல.
வேறு சில சிக்­கல்­களும் எழுப்­பப்­ப­டு­கின்­றன. ஏர் இந்­தியா நிறு­வ­னத்­தின் பெரும்­பான்மை பங்­கு­களை வாங்­கி­னால், அதற்­குச் சொந்­த­மான இடங்­களோ, கலைப் பொருட்­களோ, வேறு உரி­மங்­களோ கிடைக்­குமா? என்றால், அதற்கு பதில், இல்லை என்பதே.கட­னுக்­கான உத்­த­ர­வா­தத்தை தரு­வ­தற்கு, ஏர் இந்­தியா (அதா­வது அர­சாங்­கம்)ஏதே­னும் உதவி செய்­யவும் வாய்ப்­பில்லை. மிச்­ச­முள்ள, 24 சத­வீ­தத்தை அர­சாங்­கம் ஏன் வைத்­துக்­கொள்ள வேண்­டும்? அப்­ப­டி­யா­னால், அர­சாங்­கம் சார்­பாக, நிர்­வா­கக் குழு­வில் உறுப்­பி­னரை நிய­மிக்­குமா? நிய­மிக்­க­லாம். அது தொல்­லை­யாச்சே!கத்­தி­ரிக்­காய் கடைத்­தெ­ரு­வுக்கு வந்­து­விட்­டால், அதன் விலை­யைச் சந்தை தான் தீர்­மா­னிக்­கும். அது­தான், ஏர் இந்­தியா விஷ­யத்­தி­லும் நடக்­கிறது.
அடி மாட்டு விலை
ஏர் இந்­தியா பணி­யா­ளர்­க­ளின் நல­னைக் காப்­பாற்ற வேண்­டும் என்று நினைக்­கும் அர­சாங்­கம், ஒரு சில அம்­சங்­களை ஏற்­றுள்ளது. உதா­ர­ண­மாக, விருப்ப ஓய்­வுத் திட்­டம், பணி­யா­ளர்­க­ளுக்­கான பங்­கு­களை வழங்­கு­தல் ஆகி­ய­வற்­றோடு நிலு­வை­யி­லுள்ள சம்­ப­ளப் பாக்­கி­க­ளுக்­காக, 1,300 கோடி ரூபாய் ஒதுக்­கப்­படும் என, தெரி­வித்­துள்­ளது.
மேலும், ஓய்­வு­பெற்ற பணி­யா­ளர்­க­ளின் மருத்­து­வச் செல­வு­கள், அவர்­க­ளு­டைய இல­வச விமா­னப் பய­ணத்­துக்­கான செல­வு­க­ளை­யும் அரசே ஏற்க, சம்மதித்துள்ளது.இப்­ப­டி­யெல்­லாம் பொறுப்­பு­களை ஏற்­றா­லும், ஏர் இந்­தியா இன்­னும் கவர்ச்­சி­க­ர­மாக இல்லை. அர­சாங்க நிறு­வ­னம், அது­வும் நஷ்­டத்­தில் தத்­த­ளிக்­கும் நிறு­வ­னம், அர­சாங்­கத்­தா­லேயே கைவி­டப்­பட்ட நிறு­வ­னம், அதைப் போய் யாரா­வது கூடு­தல் விலை கொடுத்து வாங்­கு­வரா என்ன?
முடிந்­த­வரை மட்­டம் தட்டி, அடி­மாட்டு விலைக்கு வாங்­கிப் போடு­வது தானே சரி என்று, கார்ப்­ப­ரேட் நியா­யம் எல்­லார் கண்­ணை­யும் மறைக்­கிறது. அத­னால், முடிந்­த­வரை இழுத்­த­டிக்­கும் பட­லம் தொடர்­வ­தாக ஒரு பேச்சு.இதை தான், காங்­கி­ரஸ் கட்­சி­யின் மணீஷ் திவா­ரி­யும் சொல்­கி­றார்; ஏர் இந்­தியா பணி­யா­ளர்­கள் சங்­க­மும் சொல்­கிறது. இப்­படி ஒரு கோணம் இருப்­பதை முற்­றி­லும் புறக்­க­ணித்­து­விட முடி­யாது.
இன்­னொரு வாத­மும் உண்டு. நாங்­கெல்­லாம், ‘சிறுக கட்­டிப் பெருக வாழ’ நினைக்­கும் விமான நிறு­வ­னங்­கள். ‘யானை கட்டி போர் அடிக்க’ நாங்­கள் என்ன அர­சாங்­கமா? அந்த வித­மான அளப்­ப­ரிய வளங்­களோ, வச­தி­களோ எங்­க­ளி­டம் இல்­லையே என்ற பேச்­சும் உலா வரு­கிறது. இதை­யும் புறக்­க­ணிக்க முடி­யாது.
என்ன தீர்வு?
அப்­ப­டி­யா­னால் என்ன தான் தீர்வு? கடன் தொகை­யான 33 ஆயி­ரத்து, 392 கோடியை, அர­சாங்­கம் தள்­ளு­படி செய்ய வேண்­டும். பணி­யா­ளர்­களை வைத்­துக்கொள்ள வேண்­டும் என, வற்­பு­றுத்­தக் கூடாது, நிர்­வா­கத்­தில் தலை­யி­டக் கூடாது என்­ப­தோடு, ஏர் இந்­தியா மொத்­தத்­தை­யும் ஒரே சொத்­தாக விற்­கா­மல், அதை பல்­வேறு பகு­தி­க­ளா­கப் பிரித்து விற்­பனை செய்­தால் தான், வாங்­கு­வ­தற்கு முன்­வ­ரு­வர் என்­கின்­ற­னர், பொரு­ளா­தார நிபு­ணர்­கள்.கையை விட்­டுப் போனால் போதும் என்று, அர­சாங்­க­மும் இத்­த­கைய நெருக்­க­டி­க­ளுக்கு வளைந்து கொடுக்­கக்­கூ­டிய வாய்ப்பே அதி­கம்.
ஆசை ஆசை­யாக வளர்க்­கப்­பட்ட பொதுத்­துறை நிறு­வ­னம் என்ற பெருங்­க­னவு, நிர்­வா­கச் சீர்­கேடு என்­னும், தீயில் கரு­கப் போகிறது. ஒற்­றைக் கைம­டித்து, பணி­வாக சலாம் போடும் அழகு மகா­ரா­ஜாவை இனி காணவே முடி­யாதோ?
ஆர்.வெங்­க­டேஷ்
பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)