பதிவு செய்த நாள்
17 ஏப்2018
06:17
சென்னை : சென்னையில் செந்துாரம், பங்கனப்பள்ளி மாம்பழ வகை வரத்து துவங்கி உள்ளது.பூக்கடை பழச் சந்தையில், செந்துாரம், பங்கனப்பள்ளி மாம்பழ ம் வரத்து துவங்கியுள்ளது. செந்துாரம் ஒரு கிலோ, 110 ரூபாயாக உள்ளது.பங்கனப்பள்ளி வரத்து குறைவால், ஒரு கிலோ, 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. மாதவரம் மாம்பழ சந்தை இன்னும் கூடவில்லை. ஆந்திராவில் இருந்து மாம்பழம் வரத்து அதிகரிக்கும் போது, ஓரிரு வாரத்தில் மாதவரத்தில் மாம்பழம் சந்தை துவங்கும். சப்போட்டா ஒரு கிலோ, 30 ரூபாயாகவும், சாத்துக்குடி, கமலா உள்ளிட்டவை சில்லரை விலையில், ஒரு கிலோ, 80 – 100 ரூபாயாகவும் உள்ளது. மாதுளை ஒரு கிலோ, 80 – 100 ரூபாயாக உள்ளது. அத்தி ஒரு பெட்டி, 40 – 50 ரூபாயாக உள்ளது. ஆந்திர தர்பூசணி ஒரு கிலோ, 15 ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|