பதிவு செய்த நாள்
17 ஏப்2018
06:18
சென்னை : வரத்து அதிகரிப்பு காரணமாக, மலர் சந்தையில் ரோஜா விலை அதிரடியாக சரிந்து உள்ளது.சென்னை பூக்கடை மலர் விற்பனை அங்காடிகளில், ரோஜா, மல்லி விலை குறைந்து உள்ளது. திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஆந்திராவில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், ரோஜா கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை ஆனது. மல்லி ஒரு சேர், 20 – 40 ரூபாய்க்கு விற்பனையானது. சாமந்தி வரத்து குறைந்துள்ளது. குறைந்தளவே விற்பனைக்கு வரும் சிறிய ரக சாமந்தி, 1 கிலோ, 120 ரூபாயாக உள்ளது. தாமரை வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு மலரின் விலை, 3 ரூபாய்க்கு குறைந்துள்ளது. செண்பகப்பூ ஒன்று, ஒரு ரூபாய்க்கு விற்பனையானது. கனகாம்பரம், 50 கிராம், 30 – 40 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|