பதிவு செய்த நாள்
17 ஏப்2018
06:22
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, சோளம், கரும்புச் சக்கையால் ஆன உணவு பொருட்களுக்கான பேக்கிங் வகைகள், விற்பனைக்கு வந்துள்ளன.
தமிழகத்தில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிறுவனங்கள், 40 மைக்ரானுக்கு குறைவாக, பிளாஸ்டிக் தயாரித்தால், அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வந்த பேப்பர் கப் மற்றும் பாக்கு மட்டையால் தயாரான தட்டு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து, கரும்பு மற்றும் சோளச் சக்கையால் ஆன தட்டு, கிண்ணம், டம்ளர் உள்ளிட்டவை, விற்பனைக்கு வந்துள்ளன.
இது குறித்து, உணவு பேக்கிங் பொருட்கள் விற்பனையாளரும், வடசென்னை வியாபாரிகள் சங்க செயலருமான, அப்துல் அஜீஸ் கூறியதாவது: இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத்திலிருந்தும், சீனாவிலிருந்தும் மக்காச் சோளம் மற்றும் கரும்பு சக்கையால் ஆன தட்டு உள்ளிட்ட உணவு பேக்கிங் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களுடன் ஒப்பிடும்போது, இவற்றின் விலை, 40 தவீதம் அதிகம் தான். ஆனால், எளிதில் மக்கும் என்பதால், இதற்கு வரவேற்பு மெல்ல உயர்ந்து வருகிறது.இதற்கு முன் வந்த பேப்பர் கப் மற்றும் பாக்கு மட்டையால் ஆன தட்டு உள்ளிட்டவற்றில், பூஞ்சை பிடிப்பது போன்ற பிரச்னைகள் இருந்தன.
தற்போது, சோளம் மற்றும் கரும்புச் சக்கையால் ஆனவை, 3 ரூபாய் முதல் அதிகபட்சம், 20 ரூபாய் வரை ஆகிறது. பத்தில், மூன்று பேர் இந்த மாதிரியான தயாரிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர். துவக்கத்தில், பிளாஸ்டிக் பேப்பர் அல்லது வாழை இலைக்காக, 10 பைசா தான் செலவானது. அதன்பின், 1.50 ரூபாயாக உயர்ந்து, தற்போது, 6.50 ரூபாய் வரை செலவாகிறது. தற்போது, மண்ணுக்கும்,
எதிர்கால சந்ததிக்கும் ஊறு விளைவிக்காத கரும்புச் சக்கை போன்ற பொருட்களின், ‘பேக்கிங்’ வகைகளின் விலை, 30 சதவீதம் கூடுதல் ஆனாலும், நன்மையே!அதே போல் தேநீருக்கு பேப்பர் கப் வந்தது போல், உணவுப் பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை பேக்கிங் செய்ய பேப்பர் டின்கள் விற்பனைக்கு வந்துள்ளன. விரைவில் உணவு பேக்கிங் பிரிவில் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|