பதிவு செய்த நாள்
17 ஏப்2018
06:24
புதுடில்லி : ஏழு நிதியாண்டுகளுக்கு பின், முதன்முறையாக, கடந்த நிதியாண்டில், பயணியர் வாகன ஏற்றுமதி, 1.51 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
இது குறித்து, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ வெளியிட்டுள்ள அறிக்கை:உள்நாட்டு சந்தையில் அதிகம் கவனம் செலுத்தியதாலும், ஜி.எஸ்.டி.,யின் கீழ், உள்ளீட்டு வரி உரிய நேரத்தில் கிடைக்காததாலும், 2017 – 18ம் நிதியாண்டில், பயணியர் வாகன ஏற்றுமதி, 7.58 லட்சத்திலிருந்து, 1.51 சதவீதம் குறைந்து, 7.47 லட்சமாக குறைந்துள்ளது.
இது, ஏழு ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக, பயணியர் வாகன ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியாகும்.இந்த துறைக்கு, 1,000 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி மூலம் வர வேண்டி உள்ளது.மதிப்பீட்டு நிதியாண்டில்,போர்டு இந்தியா நிறுவனம், 1.81 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கடுத்த இடங்களில், ‘ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா, வோக்ஸ்வேகன் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
அதே சமயம், 2017 – 18ம் நிதியாண்டில், இருசக்கர வாகன ஏற்றுமதி, 20.29 சதவீதம் ஏற்றம் கண்டு, 28.1 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 23.4 லட்சமாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|