பதிவு செய்த நாள்
18 ஏப்2018
00:10
சென்னை : கோயம்பேடு மலர் சந்தையில் வரத்து அதிகரிப்பு காரணமாக, மல்லி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தற்போது, 1 கிலோ மல்லி, 100 – 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல் ரோஜா விலையும் குறைந்து, 1 கிலோ, 30 – 40 ரூபாயாக உள்ளது. சாமந்தி சீசன் முடிந்து விட்டதால், இதன் விலை, 1 கிலோ, 150 – 200 ரூபாயாக உள்ளது.
பழ வகைகளில் திராட்சை, 10 கிலோ, 500 ரூபாயில் இருந்து, 650 – 800 ரூபாயாக உயர்ந்துள்ளது. வரத்துக்கு ஏற்ற விற்பனையும் இருப்பதால், பழங்களின் விலை மெல்ல உயர்ந்து வருகிறது.
காய்கறிகளிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. பீன்ஸ் மட்டும், 1 கிலோ, 40 – 50 ரூபாயாக உள்ளது. தக்காளி, வெங்காயம், உருளை, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள், கிலோ, 20 – 45 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|