பதிவு செய்த நாள்
19 ஏப்2018
00:35
சென்னை : கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்யப்பட்ட எலுமிச்சை, கடந்தாண்டு, ஒரு கிலோ, அதிகபட்சம், 120 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதன் பின் வரத்து அதிகரிப்பு காரணமாக, ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு சரிந்தது. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையில், ஒரு எலுமிச்சை, 3 – 5 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கோடை வெயில் தாக்கத்தால் எலுமிச்சை விற்பனை அதிகரித்து வருகிறது. விவசாயிகளிடம், ஒரு கிலோ, 100 ரூபாய் அளவுக்கு கொள்முதல் செய்து, வியாபாரிகளுக்கு, 160 – 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ‘சில்லரை விலையில் ஒரு எலுமிச்சை, 4 – 6 ரூபாய்க்கு விற்பனையாகிறது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|