பதிவு செய்த நாள்
19 ஏப்2018
00:37
சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறிகள் அதிக ஏற்றம் இல்லாமல், சகாய விலையிலேயே விற்பனையாகின்றன.
பொதுமக்களின் நுகர்வு குறைந்த அளவிலேயே இருப்பதால், கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை, அதிக ஏற்றம் இல்லாமல் விற்பனையாகின்றன. நேற்று தக்காளி ஒரு கிலோ, 10 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம், 15 – 20 ரூபாய்க்கும், கேரட், சவ்சவ், புடலங்காய், முருங்கைக்காய் உள்ளிட்டவை, 20 ரூபாய்க்கும், பீன்ஸ், 30 – 35 ரூபாய்க்கும் விற்பனையாகின.
குறைந்த விலையாக முட்டைகோஸ் ஒரு கிலோ, 8 ரூபாய்க்கும், பீட்ரூட், 12 ரூபாய்க்கும், கத்திரிக்காய், 10 ரூபாய்க்கும் விற்பனையாகின. அவரை, கோவக்காய், பாகற்காய் உள்ளிட்டவை கிலோ, 15 – 25 ரூபாய் வரை விற்றன. அதிகபட்சமாக இஞ்சி, ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது. பருப்புக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கன்னி உள்ளிட்டவை, 5 – 7 ரூபாய்க்கும், வல்லாரை, துாதுவளை, 10 ரூபாய்க்கும் விற்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|