பதிவு செய்த நாள்
19 ஏப்2018
00:38
புதுடில்லி : ‘சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விதிக்கப்படும், ‘மேட்’ வரியை நீக்க வேண்டும்’ என, பி.எச்.டி., வர்த்தக கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர், அனில் கெய்தான் கூறியதாவது: ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த நோக்கம் நிறைவேறவில்லை. சீனா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளை போல, சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியை மேம்படுத்த தவறிவிட்டோம்.
இந்த மண்டலங்கள், கடந்த நிதியாண்டில், 537 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளன. எனினும், பல்வேறு கட்டுப்பாடுகள், வளர்ச்சிக்கு தடையாக உள்ளன; அவற்றை நீக்க வேண்டும். இந்த மண்டலங்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இருந்தபோதிலும், சுலபமாக தொழில் செய்வது இன்னும் பிரச்னையாகவே உள்ளது.
குறிப்பாக, நிறுவனங்களின் லாபத்தில், 18.5 சதவீதம் மேட் வரியுடன், இதர வரிகள் வசூலிக்கப்படுகின்றன; அவற்றை நீக்க வேண்டும். இதன் மூலம், இம்மண்டலங்களுக்கு, அதிக அளவில் நிறுவனங்கள் வரும்; ஏற்றுமதி அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|