பதிவு செய்த நாள்
19 ஏப்2018
00:38
புதுடில்லி : ‘இந்தாண்டு, பருவ மழை பொழிவு, வழக்கமான அளவிற்கு இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்பு உள்ளது’ என, ‘பேங்க் ஆப் அமெரிக்க மெரில் லிஞ்ச்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜூனில் துவங்கும் தென்மேற்கு பருவ மழை, வழக்கமான அளவிற்கு இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், வேளாண் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். மேலும், நடப்பு நிதியாண்டில், சில்லரை பணவீக்கம், சராசரியாக, 4.3 சதவீதம் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 2 – 6 சதவீதத்திற்குள் உள்ளது. அதனால், ஆகஸ்டில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, ரெப்போ வட்டி விகிதத்தை, 6 சதவீதத்தில் இருந்து, 0.25 சதவீதம் குறைத்து, 5.75 சதவீதமாக நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|