பதிவு செய்த நாள்
21 ஏப்2018
00:28
சென்னை : சென்னையில், வரி பிரச்னை காரணமாக மூடப்பட்ட நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலையை ஏற்று நடத்த, தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசுக்கும், நோக்கியா நிறுவனத்திற்கும் இடையிலான, 1,600 கோடி ரூபாய் வரிப் பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கும், பின்லாந்து அரசுக்கும் இடையே, பரஸ்பர ஒப்பந்த நடைமுறையின் கீழ், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக, டில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதனால், சென்னை அருகே அமைந்துள்ள நோக்கியா தொழிற்சாலையை விற்பதற்கான தடை நீங்கி விட்டது. இந்நிறுவனத்திற்கு, ஏற்கனவே, தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், மொபைல் போன் உதிரிபாகங்களை தயாரித்து அளித்து வந்தது. அதனால், நோக்கியாவின் ஆலையை வாங்கும் முயற்சியில் பாக்ஸ்கான் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
விரைவில், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|