விரைவில் ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல்விரைவில் ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் ... ‘எல்.ஓ.யு., பிரச்னைக்கு விரைவில் தீர்வு’ ‘எல்.ஓ.யு., பிரச்னைக்கு விரைவில் தீர்வு’ ...
முட்டை ஏற்றுமதி பின்னடைவு : பண்ணையாளர்கள் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2018
01:59

நாமக்கல்: தினமும், 15 லட்சமாக இருந்த முட்டை ஏற்றுமதி, விலை உயர்ந்து வருவதன் காரணமாக, ஐந்து லட்சமாக குறைந்துள்ளதால், பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.தேசிய அளவில், கோழி முட்டை உற்பத்தியில், தனிச் சிறப்பு பெற்ற நாமக்கல் மண்டலத்தில் இருந்து, 2007 – 08ல், பக்ரைன், குவைத் உள்ளிட்ட, 11 வளைகுடா நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்க நாடுகளுக்கும், மாதந்தோறும், 12 கோடி முதல், 15 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.இந்நிலையில், ஆறு மாதங்களாக இருந்த காலாவதியை, மூன்று மாதங்களாக குறைத்ததால், இந்திய முட்டை ஏற்றுமதி குறைக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளின் நிர்ப்பந்தத்தால், வளைகுடா நாடுகளுக்கு ஆறு ஆண்டுகளாக முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், 2017 நவ., 16ல், வரலாறு காணாத வகையில், முட்டை கொள்முதல் விலை, 516 காசாக நிர்ணயம் செய்யப்பட்டதால்,ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதையடுத்து, கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து, மார்ச், 26ல், 335 காசாக நிர்ணயம் செய்யப்பட்டதால், ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்தது. தற்போது, கொள்முதல் விலை உயர்ந்து வருவதால் ஏற்றுமதி சரிந்துள்ளது.இது குறித்து, கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்கள் வர்த்தக சங்கத்தினர் கூறியதாவது:இந்திய முட்டைகளுக்கு வரவேற்பு இருந்ததால், ஏற்றுமதி அதிகரித்தது. விலை உச்சத்தை தொட்டபோது, ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. படிப்படியாக விலை குறைந்ததால், ஏற்றுமதியும் அதிகரித்தது.தற்போது, மீண்டும் விலை உயர்ந்து வருவதால், ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தினமும், 15 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஐந்து லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேலும், இந்திய விலை உயர்வை காட்டி, வெளிநாடுகளில், முட்டை கொள்முதல் விலை குறைத்து, வினியோகம் செய்வதால், இந்திய.ே முட்டைக்கு ஆர்டர் குறைந்துள்ளது. அதுவும், ஏற்றுமதி வீழ்ச்சியடைய காரணமாகும். ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு வழங்கிய போக்குவரத்து மானியமும் நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)