பதிவு செய்த நாள்
26 ஏப்2018
03:10
சேலம் : தமிழகத்தில் கருப்பட்டி உற்பத்திக்கான சீசன் துவங்கி உள்ளதால், மார்க்கெட்டில் வரத்து அதிகரித்து, விலை கிலோவுக்கு, 20 ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், உடன்குடி, துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கருப்பட்டி உற்பத்தி தற்போது துவங்கி நடந்து வருகிறது.
இதன் காரணமாக, சென்னை, விருதுநகர், சேலம் லீபஜாருக்கு விற்பனைக்கு வரும் கருப்பட்டியின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நேற்று கிலோவுக்கு, 20 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.முதல் தர கருப்பட்டி, கிலோ, 240 ரூபாய்க்கு விற்றது, 220 ரூபாயாகவும், இரண்டாம் தரம், 200 ரூபாய்க்கு விற்றது, 180 ரூபாயாகவும், மூன்றாம் தரம், 180 ரூபாய்க்கு விற்றது, 160 ரூபாயாகவும் சரிந்துள்ளது.
இது குறித்து, செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த கருப்பட்டி வியாபாரி முருகேசன் கூறியதாவது: கருப்பட்டி சீசன் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் துவங்கி, ஆகஸ்ட் முதல் வாரம் வரை இருக்கும். நடப்பாண்டில், கருப்பட்டியின் உற்பத்தியில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், வாரத்துக்கு, 50 லாரிகளில் விற்பனைக்கு வந்த கருப்பட்டியின் வரத்து தற்போது, 100 லாரி அளவுக்கு வருவதால், விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு ஆகஸ்ட் மாதம் தொடரும். அதன் பின், விலையில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|