சிறிய நகரங்களில் எம்.எப்., முதலீடு ரூ.4.27 லட்சம் கோடியாக உயர்வுசிறிய நகரங்களில் எம்.எப்., முதலீடு ரூ.4.27 லட்சம் கோடியாக உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ...
இந்தியாவின் ஜி.டி.பி., 7.8 சதவீதமாக உயரும்; ஜப்பானின், ‘நோமுரா’ நிறுவனம் மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2018
03:18

புது­டில்லி : ‘நடப்­பாண்­டின், முதல் அரை­யாண்­டில், ஜி.டி.பி., எனப்­படும் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி இந்­தி­யா­வில், சரா­ச­ரி­யாக, 7.8 சத­வீ­த­மாக உய­ரும்’ என, ஜப்­பா­னைச் சேர்ந்த நிதி ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ‘நோமுரா’ தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வில், முத­லீ­டு­கள் அதி­க­ரித்து வரு­கின்றன; அதே­ச­ம­யம், மக்­களின் நுகர்­வும் உயர்ந்து வரு­கிறது. இந்த இரு அம்­சங்­களும், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்­சிக்கு முக்­கிய கார­ணி­க­ளாக விளங்­கு­கின்றன.

இந்­தி­யா­வின் நிகர ஏற்­று­மதி வளர்ச்சி குறைந்­துள்­ளது. இருந்­த­போ­தி­லும், அதை ஈடு செய்­யும் அள­விற்கு, முத­லீ­டு­கள் குவிந்து வரு­கின்றன. மக்­களின் தேவை அதி­க­ரித்­து உள்­ளது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., போன்­ற­வற்­றின் தாக்­கத்­தால், இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் மந்த நிலை காணப்­பட்­டது. இந்­தியா, இந்த பாதிப்­பு­களில் இருந்து, 2017ன் பிற்­பா­தி­யில் மீளத் துவங்­கி­யது. இந்த முன்­னேற்­றம், நடப்­பாண்­டின் முதல் பாதி­யி­லும் தொடர்­கிறது. அத­னால், முதல் அரை­யாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, சரா­ச­ரி­யாக, 7.8 சத­வீ­த­மாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு, அக்., – டிச., வரை­யி­லான காலாண்­டில், ஜி.டி.பி., 7.2 சத­வீ­த­மாக இருந்­தது.கச்சா எண்ணெய்கச்சா எண்­ணெய் விலை உயர்ந்து வரு­கிறது. ஒரு பேர­லுக்கு, 10 டாலர் உயர்ந்­தா­லும், அது, நாட்­டின் சில்­லரை பண­வீக்­கத்­தில், 0.3 –- 0.4 சத­வீத உயர்­வுக்கு வழி வகுக்­கும். நாட்­டின் நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றை­யும், 0.4 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும். அத­னால், தற்­போ­தைய கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம் தொடர்ந்து நீடித்­தால், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்­டியை உயர்த்­தக் கூடும்.

மத்­திய அரசு, நிதி நிலையை கருத்­தில் கொண்டு, சிக்­க­னத்தை கடை­பி­டிக்­கிறது. இந்­நி­லை­யில், கர்­நா­டகா, ராஜஸ்­தான், மத்­திய பிர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் சட்­ட­சபை தேர்­தல்­கள் நடை­பெற உள்ளன. இத­னால், இந்­தி­யா­வில் முத­லீ­டு­கள் குறை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இது போன்ற கார­ணங்­க­ளால், இரண்­டா­வது அரை­யாண்­டில், இந்­தி­யா­வின், ஜி.டி.பி., வளர்ச்சி மித­மா­கவே இருக்­கும் என, தெரி­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

ரிசர்வ் வங்கி:
இம்­மா­தம், 5ம் தேதி கூடிய, ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு, நடப்பு 2018- – 19ம் நிதி­யாண்­டில், ஜி.டி.பி., 7.4 சத­வீ­த­மாக உய­ரும் என, தெரி­வித்­தி­ருந்­தது. இது, கடந்த நிதி­யாண்­டில், 6.6 சத­வீ­தம் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேலும், ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு, 6 சத­வீத ரெப்போ வட்டியில் மாற்­ற­மில்லை என, தெரி­வித்­தது. இக்­குழு, தொடர்ந்து மூன்­றா­வது முறை­யாக, வட்டி விகி­தத்­தில் மாற்­றம் ஏதும் செய்­ய­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வரும் மாதங்­களில், கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், சில்­லரை பண­வீக்­கம் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத­னால், ஜூன் 5ல் நடை­பெ­றும் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு கூட்­டத்­தில், ரெப்போ வட்­டி­யில் மாற்­றம் இருக்­கும் என, தெரி­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)