பதிவு செய்த நாள்
27 ஏப்2018
14:47
புதுடில்லி : 2017-18 ம் நிதியாண்டில் ரூ.7.41 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜிஎஸ்டி வசூல் மூலம் ரூ.7.19 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2017 ம் ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலையும் சேர்த்து, 2017-18 ம் ஆண்டில் மொத்தம் ரூ.7.41 லட்சம் கோடி வசூலாகி உள்ளது.
இதி்ல் சிஜிஎஸ்டி மூலம் ரூ.1.19 லட்சம் கோடியும், எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.1.72 லட்சம் கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் ரூ.3.66 லட்சம் கோடியும், செஸ் மூலம் ரூ.62,021 கோடியும் வசூலாகி உள்ளது. ஆகஸ்ட் முதல் மார்ச் மாதம் வரை சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.89,885 கோடி வசூலாகி உள்ளது. இந்த 8 மாதங்களில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இழப்பீட்டு தொகை ரூ.41,147 கோடியாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|