பதிவு செய்த நாள்
28 ஏப்2018
00:41
நிலக்கடலை விலை, கவலை தரும் வகையில் இருப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில், இந்தாண்டு நிலக்கடலை விளைச்சல் அதிகமாக இருந்தாலும், ‘விலை எதிர்பார்த்த அளவு இல்லை’ என விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகள், தமிழக – ஆந்திர எல்லைப் பகுதிகளில் நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது.
தற்போது நிலக்கடலை, 80 கிலோ மூட்டை, 4,100 முதல், 4,500 ரூபாய் வரை விலை போகிறது. சில்லரை விலையில், 1 கிலோ, 60 – 75 ரூபாய் வரை விலை உள்ளது. இது குறித்து, அரியலுார் மற்றும் திருவள்ளூர் பகுதி நிலக்கடலை வியாபாரிகள் கூறியதாவது:
இந்தாண்டு விளைச்சல் அதிகமானதால் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் கடலையை விற்காமல் நல்ல விலைக்காக இருப்பு வைத்துள்ளனர். அரியலுார் உள்ளிட்ட பல கிராமங்களில், அறுவடை மற்றும் வாகன வாடகைக்கு கூட வருமானம் போதவில்லை. இதனால் நெல், கரும்பை போல், நிலக்கடலைக்கும் விலை நிர்ணயம் செய்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|