பதிவு செய்த நாள்
28 ஏப்2018
00:42
மிளகு விளைச்சல் அமோகமாக இருந்தாலும், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆண்டு தோறும், பிப்ரவரி முதல் மே வரை காணப்படும் மிளகு சீசனில், இந்தாண்டு விளைச்சல் திருப்தியாக இருப்பதாக சேலம், ஏற்காடு பகுதி மிளகு விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், மருத்துவத்திற்காக இளம் மிளகு கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாலும், கேரளாவிலும் விளைச்சல் அமோகமாக இருப்பதாலும், தமிழக மிளகு வகைகளின் விலை குறைந்துள்ளதாக அவர்கள் கூறினர்.
இது குறித்து, சேலம் பகுதி மிளகு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: உலகிலேயே வியட்னாம், இந்தோனேஷியா, இலங்கை, இந்தியாவில் தான் மிளகு விளைச்சல் அதிகம். இந்தியாவை பொறுத்தவரை கொச்சி தான் மிளகுக்கு ஏற்ற மார்க்கெட். தமிழகத்தில் என்றால் சேலம். சேலத்தில் இந்தாண்டு மிளகு அறுவடை திருப்தியாக உள்ளது. அதேபோல், கேரளாவிலும் விளைச்சல் அதிகரித்துள்ளது. இங்கு அறுவடை ஆரம்பிக்கும் முன், மருத்துவத்திற்காக இளம் மிளகை கேரளாவினர் அதிக அளவு கொள்முதல் செய்து விட்டனர். கேரளாவிலும் அறுவடை அதிகம் இருப்பதால், தமிழக மிளகுக்கு விலை குறைவாகவே உள்ளது. தற்போது, தரமான மிளகு, 1 கிலோ, 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் தர மிளகு, 1 கிலோ, 480 ரூபாய் முதல் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|