பதிவு செய்த நாள்
28 ஏப்2018
00:43
நாமக்கல் : சத்துணவு முட்டை தேக்கம், காய்கறி விலை சரிவு, வெளி மண்டலங்களில் விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால், நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை, இரண்டு நாட்களில், 25 காசு சரிந்துள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (நெக்) நிர்ணயம் செய்யும் விலைக்கே முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த, 23ல், 10 காசு சரிந்து, 350; 26ல், 15 காசு குறைக்கப்பட்டு, 335 என, கொள்முதல் விலை, இரண்டு நாட்களில், 25 காசு சரிந்துள்ளது. ஏறிய வேகத்தில் முட்டை விலை இறங்கியதால், பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில், வெயில் காரணமாக, தினமும், 15 சதவீத முட்டை உற்பத்தி சரிந்து வருகிறது. ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால், சத்துணவுக்கு தினமும் வினியோகித்த, 45 லட்சம் முட்டைகள் தேக்கம்அடைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|