பதிவு செய்த நாள்
28 ஏப்2018
00:49
பெங்களூரு : ‘இந்தியாவில் வர்த்தகம் நன்கு நடைபெறுவதால், தொடர்ந்து முதலீடு செய்யப்படும்’ என, வலைதள சந்தை நிறுவனமான, ‘அமேசான்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் மூத்த துணை தலைவர், பிரியன் ஓல்சவ்ஸ்கி கூறியதாவது:அமேசான் நிறுவனர், ஜெப் பிசோஸ், ‘இந்தியாவில், 500 கோடி டாலர் முதலீடு செய்யப்படும்’ என, தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்தியாவில் இந்நிறுவனம், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
எங்கள் வலைதளத்தில் பொருட்களை விற்கும் விற்பனையாளர்களும், அவற்றை வாங்கும் நுகர்வோர்களும் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவில், மிகச் சிறப்பான வளர்ச்சி உள்ளதால், இங்கு தொடர்ந்து முதலீடு செய்யப்படும். ‘அமேசான் பிரைம்’ திட்டத்தில், உள்ளுர் மொழிகளில் படங்கள், வீடியோக்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், இந்நிறுவனம், அதன் சர்வதேச வர்த்தகத்தில், 62.20 கோடி டாலர் இழப்பை சந்தித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 48.10 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், இதே காலத்தில், இதன் விற்பனை, 1,106 கோடி டாலரில் இருந்து, 1,480 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|