பதிவு செய்த நாள்
28 ஏப்2018
00:55
கோவை : கனரக சரக்கு வாகனங்களுக்கான, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வால், லாரி தொழில் நலிவடையும் என, லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 28ல், இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம், சரக்கு வாகனங்களுக்கான, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணங்களை, 40 சதவீதம் வரை உயர்த்தியது. இது, கனரக சரக்கு வாகனங்களுக்கு, 15 ஆயிரத்து, 365 முதல், 24 ஆயிரத்து, 708 ரூபாயாக முன்னர் இருந்தது.
இத்தொகை, 37 ஆயிரத்து, 62 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பின், லாரி உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, 21 ஆயிரத்து, 511 முதல், 36 ஆயிரத்து, 120 ரூபாய் வரை என குறைக்கப்பட்டது.எனினும், ஓரிரு சரக்கு லாரிகளை வைத்து தொழில் செய்யும் லாரி உரிமையாளர்கள் பெரிதும் சிரமப்படுவர்.
லாரி தொழிலை நம்பியுள்ள கூலித்தொழிலாளர், புக்கிங் ஆபீஸ், மெக்கானிக், டிங்கர், பெயின்டர், டயர் கடைகள் உள்ளிட்ட, 45 துணைத் தொழில்களும் பாதிக்கப்படும். லாரி தொழிலே நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கலியபெருமாள், செயலர் முருகேசன் மற்றும் பொருளாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முழு காப்பீடு, மூன்றாம் நபர் காப்பீடு என்று வாகன காப்பீடு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
‘தற்போது சரக்கு லாரிகளுக்கு, 45 ஆயிரம் ரூபாய் வரை காப்பீடு தொகை செலுத்த வேண்டியிருக்கிறது. 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய சரக்கு லாரிகளுக்கு கூட, இதே தொகையை செலுத்த வேண்டும்.‘இது, லாரி தொழிலையே முற்றிலும் முடக்கும் நடவடிக்கையாகும். எனவே, இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம், கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|