பதிவு செய்த நாள்
28 ஏப்2018
00:59
புதுடில்லி : ‘இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்பு, நடுத்தர கால அளவில் வலுவாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளதால், அதன் கடன் தகுதி மதிப்பு, மாற்றம் ஏதும் இன்றி தொடர்கிறது’ என, சர்வதேச தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், 2006, ஆக., 1ல், இந்தியாவின் கடன் தகுதிக்கு, ஸ்திரத்தன்மையை குறிக்கும், ‘பிபிபி–’ குறியீட்டை வழங்கியது. இக்குறியீடு, மிகக் குறைந்த அளவில் முதலீடு மேற்கொள்வதை குறிக்கும். அதன் பின், 2012ல் எதிர்மறை குறியீடும், 2013ல் மீண்டும் ஸ்திரத்தன்மை குறியீடும், இந்தியாவுக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில், பிட்ச் ரேட்டிங்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்பு, வலுவாக உள்ளது. வெளிநாட்டு கடன்களும் சீராக உள்ளன. ஆனால், நிதி வருவாய் பலவீனமாக உள்ளது. நிர்வாகங்களின் மேலாண்மை திறன்களில் காணப்படும் தொய்வும், மந்தகதியில் நடைபெறும் சில கட்டமைப்பு செயல்பாடுகள் காரணமாகவும், வளர்ச்சிக்கான போராட்டம் இன்னும் கடுமையாகவே உள்ளது.
அவற்றையும் மீறி, இந்தியா முன்னேறி வருகிறது. வர்த்தகச் சூழலிலும் முன்னேற்றம் தெரிகிறது.அதனால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்ற, இறக்கம் ஒரே சீராக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு, ‘பிபிபி–’ என்பதில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.
கடந்த, 2017 –- 18ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 7.3 சதவீதம்; 2019 – -20ல், 7.5 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|