வெயிலால் உற்பத்தி சரிவு; கறிக்கோழி விலை உயர்வுவெயிலால் உற்பத்தி சரிவு; கறிக்கோழி விலை உயர்வு ... சந்தை நிலவரம் சந்தை நிலவரம் ...
பங்கு வெளியீட்டில் 4 கிராமப்புற வங்கிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2018
05:52

புது­டில்லி : மத்­திய அரசு, முதன் முறை­யாக, நான்கு பிராந்­திய கிரா­மப்­புற வங்­கி­க­ளின் புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி அளிக்க உள்­ள­தாக, தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

கிரா­மப்­புற சிறு விவ­சா­யி­கள், வேளாண் கூலித் தொழி­லா­ளர்­கள், பெண்­கள், கைவி­னை­ஞர்­கள் ஆகி­யோ­ருக்கு, கடன் உள்­ளிட்ட வச­தி­களை அளிக்­கும் நோக்­கில், பிராந்­திய கிரா­மப்­புற வங்­கி­கள் உரு­வாக்­கப்­பட்­டன.

உத்­தர பிர­தேச மாநி­லம், முரா­தா­பாத் மாவட்­டத்­தில், 1975, அக்., 2ல், ‘பிர­தமா பேங்க்’ என்ற முதல் கிராம வங்கி துவக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, 2005 மார்ச் வரை, 196 கிராம வங்­கி­கள் துவக்­கப்­பட்­டன.அதன் பின், இணைப்பு நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக, வங்­கி­கள் எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக குறைந்து, தற்­போது, 56 ஆக உள்­ளது. இவை, 4.70 லட்­சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை கொண்­டுள்­ளன. இவற்­றில், 50 வங்­கி­கள் லாப­க­ர­மாக இயங்கி வரு­கின்­றன. இந்த கிராம வங்­கி­களில், மத்­திய, மாநில அர­சு­கள், ‘ஸ்பான்­சர்’ வங்­கி­கள் ஆகி­ய­வற்­றின் பங்கு மூல­த­னம், முறையே, 50, 35 மற்­றும் 15 சத­வீ­த­மாக உள்­ளது.

‘இவ்­வங்­கி­க­ளின் நிதி­யா­தா­ரத்தை பெருக்கி, கிரா­மப்­புற மக்­க­ளுக்கு மேலும் மேம்­பட்ட சேவை­களை வழங்­கும் நோக்­கில், அவற்­றின் பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி அளிக்­கப்­படும்’ என, நடப்பு, 2018 – 19ம் நிதி­யாண்டு மத்­திய பட்­ஜெட்­டில், அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது. அதன்­படி, நல்ல நிதி­வ­ளத்­து­டன், நவீன தொழில்­நுட்ப வச­தி­யுள்ள, நான்கு கிராம வங்­கி­களை, மத்­திய அரசு தேர்வு செய்­துள்­ளது.

இது குறித்து, மத்­திய நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: பிராந்­திய கிரா­மப்­புற வங்­கி­க­ளின் பங்கு வெளி­யீடு தொடர்­பான விதி­மு­றை­களை உரு­வாக்­கும் பணி முடி­வ­டைந்­துள்­ளது. முத­லீட்­டா­ளர்­கள் வகை­யறா, பங்கு ஒதுக்­கீடு குறித்த அம்­சங்­கள் இறுதி செய்­யப்­பட்­டுள்­ளன. சிறந்த நிர்­வா­கம், நிதி­யா­தா­ரம் உள்­ளிட்ட அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில், நான்கு கிரா­மப்­புற வங்­கி­கள், பங்கு வெளி­யீட்­டிற்கு தேர்­வா­கி­யுள்­ளன.

புதிய பங்கு வெளி­யீடு குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும். பங்கு வெளி­யீட்­டிற்கு பின்­ன­ரும், மத்­திய, மாநில அர­சு­கள் மற்­றும் இதர வங்­கி­க­ளின் பங்கு மூல­த­னம், 51 சத­வீ­தத்­திற்கு குறை­யா­மல் இருக்­கும். அத­னால், பிராந்­திய கிராம வங்­கி­கள் மீதான மத்­திய, மாநில அர­சு­க­ளின் கட்­டுப்­பாட்­டில், மாற்­றம் இருக்­காது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

பல்­ல­வன் – பாண்­டி­யன்:
தமி­ழ­கத்­தில், பல்­ல­வன், பாண்­டி­யன் என, இரு பிராந்­திய கிராம வங்­கி­கள் உள்­ளன. சேலத்­தில் தலை­மை­ய­கத்தை கொண்ட, பல்­ல­வன் கிராம வங்கி, 15 மாவட்­டங்­களில், 256 கிளை­க­ளு­டன் இயங்­கு­கிறது. இதன், ‘ஸ்பான்­சர்’ வங்­கி­யாக, இந்­தி­யன் பேங்க் உள்­ளது. பாண்­டி­யன் வங்­கி­யின் தலைமை அலு­வ­ல­கம், விரு­து­ந­க­ரில் உள்­ளது. இவ்­வங்கி, 16 மாவட்­டங்­களில், 327 கிளை­கள் மூலம், சிறு விவ­சா­யி­கள், கைவி­னை­ஞர்­கள், மக­ளிர் சுய உதவி குழுக்­க­ளுக்கு நிதிச் சேவை வழங்­கு­கிறது. இவ்­வங்­கி­யில், இந்­தி­யன் ஓவர்­சீஸ் பேங்க், 15 சத­வீத பங்கு மூல­த­னத்தை கொண்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)