பதிவு செய்த நாள்
02 மே2018
00:27
தக்காளி விலை வீழ்ச்சி
வரத்து அதிகரித்ததால், தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.கோயம்பேடு காய்கறி சந்தையில், நேற்று, தக்காளி விலை வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. 1 கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்ற நிலையில், வரத்து அதிகரித்ததால், நேற்று, 5 – 8 ரூபாய்க்கு விற்பனையானது. ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளி குறைந்த விலைக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.வாழப்பாடி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரிப்பால், அவை மாட்டுக்கு தீவனமாக கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 1 கிலோ, 80 ரூபாய் வரை அதிரடியாக உயர்ந்த இஞ்சி விலை, குறைந்து, நேற்று, 40 – 45 ரூபாய்க்கு விற்பனையானது.அதிகபட்சமாக, பச்சை பட்டாணி, 1 கிலோ, 80 ரூபாய்க்கும், பீன்ஸ், 1 கிலோ, 45 – 50 ரூபாய்க்கும் விற்பனையானது. மற்ற காய்கறிகளின் விலையில், பெரிய மாற்றமில்லாமல் முந்தைய நாள் விலையிலேயே விற்பனையானது.
பழ வகைகள்
சில்லரை விலையில் பழ வகைகளின் விலை மெல்ல உயர்ந்து வருகிறது. பங்கனப்பள்ளி, அல்போன்சா, செந்துாரம் உள்ளிட்ட மாம்பழ வரத்து அதிகரித்து வருகிறது.இதன் விலை, 1 கிலோ, 150 – 200 ரூபாய் வரை உள்ளது. மாதுளை ஒரு கிலோ, 170 ரூபாய்க்கும்; ஆரஞ்சு, 160 ரூபாய்க்கும்; ஆப்பிள், அதிகபட்சம் 200 ரூபாய்க்கும் விற்பனையானது. டிராகன் புரூட் ஒன்று, 50-- – 60 ரூபாய் வரை விற்பனையானது. தர்ப்பூசணி, 1 கிலோ, 15 ரூபாய்க்கும், கிர்ணி பழம், 1 கிலோ, 20 ரூபாய்க்கும் விற்பனையானது.
மலர் வகைகள்
கோயம்பேடு சந்தையில், மல்லிகை, 1 கிலோ, 400 – 500 ரூபாய் வரை விற்பனையானது. ரோஜா, 100 ரூபாய்க்கும், கனகாம்பரம் அதிகபட்சமாக, 600 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|