பதிவு செய்த நாள்
02 மே2018
00:29
ஜோகன்ஸ்பர்க்:‘‘தெற்கு ஆப்ரிக்க நாடுகளில், இந்தியாவுக்கு மிகச் சிறந்த வர்த்தக வாய்ப்புகள் உள்ளன,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.தென் ஆப்ரிக்காவின், ஜோகன்ஸ்பர்க் நகரில், பரஸ்பர வர்த்தக மாநாட்டில், சுரேஷ் பிரபு பேசியதாவது:தெற்கு ஆப்ரிக்காவில், போட்ஸ்வானா, சுவாசிலாந்து, லெசோத்தோ, மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளில், சிறப்பான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன.உதாரணமாக, ஆப்பிள் அதிகம் விளையும் லெசோத்தோ நாடு, வேளாண் பொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு, இந்தியாவிடம் கோரியுள்ளது.மகிந்திரா வாகனங்களுக்கு இங்கு மவுசு அதிகம் உள்ளதால், உதிரிபாகங்கள் தொழிற்சாலை துவக்கவும், அழைப்பு விடுத்துள்ளது.அதுபோல, இதர ஆப்ரிக்க நாடுகளிலும் வளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. அவற்றை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும். ஆப்ரிக்காவுக்கு என, ஒரே கொள்கையை உருவாக்காமல், அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற, வர்த்தக கொள்கை உருவாக்கப்படும்.ஆப்ரிக்க நாடுகளுடன், இந்தியாவுக்கு அரசியலில் நல்லறவு உள்ளது. அதை, வர்த்தகத்திற்கும் விரிவுபடுத்தி, பரஸ்பர நலனுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|