பதிவு செய்த நாள்
02 மே2018
00:32
புதுடில்லி:ஏர் – இந்தியா நிறுவனத்தின், 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், லாபகரமாக இயங்கி வரும், ஏர் – இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் – இந்தியா சாட்ஸ் துணை நிறுவனங்களின் பங்குகளையும் விற்க திட்டமிட்டு ள்ளது.இந்த விற்பனையில் பங்கேற்க, இசைவு கோரும் விண்ணப்பம், மார்ச், 28ல் வெளியிடப்பட்டது. அதில் உள்ள பல விபரங்களை தெளிவுபடுத்துமாறு, ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த நிறுவனங்கள் கோரின.இதையடுத்து, மத்திய அரசு அளித்துள்ள விளக்கம்:ஏர் – இந்தியா பங்கு விற்பனையில், அதன் ஊழியர்களை தவிர, தனி நபர் யாரும் பங்கேற்க முடியாது.நிறுவனம் கைமாறும்போது, ஏற்கனவே உள்ள விமான சேவை நேரங்கள், பரஸ்பர விமான போக்குவரத்து போன்றவற்றின் உரிமை பாதிக்கப்படாது.எனினும், இது தொடர்பாக ஏலம் கேட்கும் நிறுவனங்கள், சுய ஆய்வு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏர் – இந்தியா ஊழியர்களின் கவலைகளுக்கு தீர்வு காணப்படும். பயன்படுத்தாத விமானங்கள் தொடர்பான முடிவை, பங்கு முதலீட்டாளர்கள் உடனான ஒப்பந்தப்படி, ஏலத்தில் வென்ற நிறுவனம் எடுக்கலாம்.மேலும் பல விபரங்கள், ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கும்போது அளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|