பதிவு செய்த நாள்
03 மே2018
00:04
சென்னை:சென்னையில் கோடை சீசனுக்கான பழங்களின் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தர்பூசணி, கிர்ணிப்பழத்தை தொடர்ந்து, மாம்பழம், நாவல் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. சில்லரை விலையில், மாம்பழத்தில், பங்கனப்பள்ளி, 1 கிலோ, 110 ரூபாய்; ஜவ்வாது, அல்போன்சா, 1 கிலோ 130 ரூபாய்; இமாம்பசந்த், 1 கிலோ, 180 ரூபாயாக விற்பனையாகின்றன.
தர்பூசணி, 1 கிலோ, 15 ரூபாயாகவும், கிர்ணி, 1 கிலோ, 30 ரூபாயாகவும் உள்ளன. காஷ்மீர் ஆப்பிள், ஆரஞ்சு, விதையில்லா திராட்சை சீசன் முடியும் நிலையில் உள்ளன. ஆப்பிளில் வாஷிங்டன் ஆப்பிள் மட்டுமே பரவலாக விற்பனைக்கு வந்துள்ளது. இவை, 1 கிலோ, 160 – 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மால்டா ஆரஞ்சு, 1 கிலோ, 80 – 100 ரூபாயாக உள்ளது.
விதையில்லா திராட்சை, 1 கிலோ, 150 ரூபாயாகவும், பன்னீர் திராட்சை, 1 கிலோ, 100 ரூபாயாகவும் உள்ளன. கொய்யா, 60 – 70 ரூபாயாகவும், சாத்துக்குடி, 80 ரூபாயாகவும் உள்ளன. பலாப்பழம், 1 கிலோ, 40 – 50 ரூபாயாக விற்பனையாகிறது.வாழைப்பழத்தில் மலைவாழை, 1 கிலோ, 130 – 150 ரூபாயாக விற்பனையாகிறது. செவ்வாழை, 60 ரூபாயாகும். நேந்திரம், பூம்பழம், ரஸ்தாளி உள்ளிட்டவை, 1 கிலோ, 50 ரூபாயாக உள்ளன.
தற்போது சீசன் ஆரம்பித்துள்ள நாவல் பழம், 1 கிலோ, 250 ரூபாயாக உள்ளது. ஆஸ்திரேலியா திராட்சை, அமெரிக்க பிளம்ஸ் உள்ளிட்டவை, 1 கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனையாகின்றன. மாதுளை, 1 கிலோ, 160 – 180 ரூபாயாக உள்ளது. சீனாவில் இருந்து வரும் டிராகன் பழம், 1 கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|