பதிவு செய்த நாள்
03 மே2018
00:05
குன்னுார்:குன்னுார் தேயிலை ஏலத்தில் வட மாநில வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்ததால், 2 லட்சத்து, 77 ஆயிரம் கிலோ தேயிலை துாள் தேக்கம்அடைந்துள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் கடந்த வாரம் ஏலம் நடந்தது. இதில், வட இந்திய வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்ததால், 2 கோடியே, 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2 லட்சத்து, 77 ஆயிரம் கிலோ தேயிலை துாள் தேக்கமடைந்தது. சராசரி விலையாக கிலோவுக்கு, 92 ரூபாய் மட்டுமே கிடைத்தது. கடந்த ஏலங்களை விட, 4 ரூபாய் விலை வீழ்ச்சி ஏற்பட்டது.தேயிலை வர்த்தகர் மகேஷ் கூறுகையில், ‘‘தற்போது மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பசுந்தேயிலையின் தரம் மாறுபடுகிறது. இதனால், டாடா போன்ற பெரிய நிறுவனங்களை சேர்ந்தோர் ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ‘‘பனிக்காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களில் எடுக்கப்படும் பசுந்தேயிலையில் தயாரிக்கப்படும் தேயிலை துாளின் தரம் சிறப்பாக இருக்கும். அதனால், அந்த மாதங்களில் விற்பனையும் அதிகமாக இருக்கும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|