பதிவு செய்த நாள்
03 மே2018
00:06
புதுடில்லி:ஜி.ஆர்., இன்ப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனம், சாலை கட்டமைப்பு, நெடுஞ்சாலை திட்ட வடிவமைப்பு உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது.இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த பின், ‘செபி’ ஜி.ஆர்., இன்ப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கும்.
இந்நிறுவனம், பங்கு வெளியீடு வாயிலாக, 1,800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. ‘இந்த நிதி, பழைய கடன்களை செலுத்தவும்; கட்டுமான உபகரணங்களை கொள்முதல் செய்யவும் பயன்படுத்தப்படும்’ என, ஜி.ஆர்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, எச்.டி.எப்.சி, பேங்க், யெஸ் செக்யூரிட்டீஸ் இந்தியா உள்ளிட்டவை நிர்வகிக்க உள்ளன.விரைவில் பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.ஆர்., இன்ப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு, பங்கு வெளியீடு மேற்கொள்ள, ஏற்கனவே 2016 செப்டம்பரில், ‘செபி’ அனுமதி வழங்கியது.
எனினும், அந்நிறுவனம் அப்போது பங்கு வெளியீட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|