பதிவு செய்த நாள்
03 மே2018
00:07
புதுடில்லி:'வாராக் கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளால், வங்கிகளின் லாபம் குறையும்' என்கிறது தர நிர்ணய நிறுவனமான மூடிஸ்.
ரிசர்வ் வங்கி, வங்கிகளின் வாராக் கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை, பிப்ரவரியில் வெளியிட்டது. இதன்படி, குறைந்தபட்சம், 2,000 கோடி ரூபாய் வாராக் கடன்களுக்கு, மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 180 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்; தவறினால், அந்நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடன் தவணையை திரும்பச் செலுத்துவதில் ஒரு நாள் தாமதம் ஆனால் கூட, ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்து, மறுசீரமைப்பு நடவடிக்கையை துவக்க வேண்டும். 'இந்த கடுமையான விதிமுறைகள், வங்கிகளின் வாராக் கடன் சுமையை அதிகரிக்கும். அதனால், வாராக் கடனுக்கு, அதிக தொகையை வங்கிகள் ஒதுக்க நேரிடும். இதனால், வங்கிகளின் லாபம் குறையும்' என, மூடிஸ் தெரிவித்துள்ளது.குறுகிய காலத்திற்கு, இந்த பாதிப்பு இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில், வங்கி கணக்குகளில் குழப்பங்கள் மறைந்து, தெளிவான நடைமுறை உருவாகும் எனவும், மூடிஸ் கூறியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|