பதிவு செய்த நாள்
03 மே2018
00:10
நியூயார்க், மே 3-அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அதன் அனைத்து வர்த்தகங்களையும் அதிகரிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டிம் குக், ஜன., - மார்ச் வரையிலான இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:
உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக, இந்தியா திகழ்கிறது. ஆனால், அச்சந்தையில், மிகக் குறைந்த பங்களிப்பையே, ஆப்பிள் கொண்டுள்ளது. இதை அதிகரிக்க, தீவிரமாக முயற்சித்து வருகிறோம். சில்லரை விற்பனை முதல், நிறுவனத்தின் அனைத்து வகையான வர்த்தகங்களையும், இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.
தொழில் வளர்ச்சிக்கு துணை நிற்கும், இந்திய தலைமை மீது உள்ள நம்பிக்கையால், அங்கு முதலீடுகளை அதிகரிக்க உள்ளோம்.மிகப் பெரிய சந்தையாக திகழும், இந்தியாவில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, சிறப்பான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன.இந்தியாவில், ஏராளமானோர், நடுத்தர வர்த்தகத்தினராக உயர்ந்து வருகின்றனர். இது, அளப்பரிய வர்த்தக வாய்ப்புகளை அளிக்க துணைபுரிவதாக உள்ளது.
'ஐபோன்' சந்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை நான் மறுக்கிறேன். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அதன் வளர்ச்சிக்கு இடமுள்ளது.கடந்த ஆண்டு, உலகில் விற்பனையான, 50 கோடி ஸ்மார்ட் போன்களில், பெரும்பான்மை சாதனங்கள், வளரும் நாடுகளில் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன.ஐபோன் அல்லது வேறு நிறுவன போன் வைத்துள்ளோர், இரண்டாவது போன் வாங்க விரும்பினால், அது, ஐபோன் ஆக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காக, ஏராளமான நேரத்தையும், தொழில்நுட்பத்தையும் செலவழித்து வருகிறோம்.மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனம், மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|