இந்தியாவில் வர்த்தகத்தை அதிகரிக்கதுடிக்கும் ஆப்பிள் நிறுவனம்இந்தியாவில் வர்த்தகத்தை அதிகரிக்கதுடிக்கும் ஆப்பிள் நிறுவனம் ... தயாரிப்பு துறை வளர்ச்சி தொடருகிறது ஏப்ரலில் புதிய, ‘ஆர்டர்’கள் குவிந்தன தயாரிப்பு துறை வளர்ச்சி தொடருகிறது ஏப்ரலில் புதிய, ‘ஆர்டர்’கள் குவிந்தன ...
இந்தியாவில் வர்த்தகத்தை அதிகரிக்கதுடிக்கும் ஆப்பிள் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2018
00:10

நியூயார்க், மே 3-அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அதன் அனைத்து வர்த்தகங்களையும் அதிகரிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டிம் குக், ஜன., - மார்ச் வரையிலான இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:
உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக, இந்தியா திகழ்கிறது. ஆனால், அச்சந்தையில், மிகக் குறைந்த பங்களிப்பையே, ஆப்பிள் கொண்டுள்ளது. இதை அதிகரிக்க, தீவிரமாக முயற்சித்து வருகிறோம். சில்லரை விற்பனை முதல், நிறுவனத்தின் அனைத்து வகையான வர்த்தகங்களையும், இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.

தொழில் வளர்ச்சிக்கு துணை நிற்கும், இந்திய தலைமை மீது உள்ள நம்பிக்கையால், அங்கு முதலீடுகளை அதிகரிக்க உள்ளோம்.மிகப் பெரிய சந்தையாக திகழும், இந்தியாவில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, சிறப்பான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன.இந்தியாவில், ஏராளமானோர், நடுத்தர வர்த்தகத்தினராக உயர்ந்து வருகின்றனர். இது, அளப்பரிய வர்த்தக வாய்ப்புகளை அளிக்க துணைபுரிவதாக உள்ளது.
'ஐபோன்' சந்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை நான் மறுக்கிறேன். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அதன் வளர்ச்சிக்கு இடமுள்ளது.கடந்த ஆண்டு, உலகில் விற்பனையான, 50 கோடி ஸ்மார்ட் போன்களில், பெரும்பான்மை சாதனங்கள், வளரும் நாடுகளில் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன.ஐபோன் அல்லது வேறு நிறுவன போன் வைத்துள்ளோர், இரண்டாவது போன் வாங்க விரும்பினால், அது, ஐபோன் ஆக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காக, ஏராளமான நேரத்தையும், தொழில்நுட்பத்தையும் செலவழித்து வருகிறோம்.மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனம், மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)